NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்
    இந்தியா

    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்

    எழுதியவர் Nivetha P
    April 05, 2023 | 06:15 pm 1 நிமிட வாசிப்பு
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்

    சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குளத்திற்கு தீர்த்தவாரி பூஜை செய்ய 25 பேர் பல்லக்கை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர். பல்லக்கில் இருந்த சாமியை நீராட வைத்துவிட்டு, பின்னர் பல்லக்கினை இறக்கி வைத்துவிட்டு அவர்கள் அனைவரும் குளிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது அதில் 5 பேர் மட்டும் மாயமாகியுள்ளனர். இது குறித்து வேளச்சேரி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் அங்கு விரைந்துவந்து 5 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். நீரில் மூழ்கி இறந்த 5 பேரும் அர்ச்சகர்கள் என்பது தெரியவந்துள்ள நிலையில், அவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முதல்வரின் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடல்களை பார்வையிட்டார்.

    நிவாரண நிதி அறிவித்து அறிக்கை வெளியீடு

    அப்போது அவர், ஒருவரை மீட்க முயன்று அடுத்தடுத்து 5 பேர் ஆழமான இடத்தில் சிக்கி மூழ்கியுள்ளார்கள். இதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே காரணம். பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு முதல்வர் நிச்சயம் உதவி செய்வார் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இன்று நடந்த கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கியப்பொழுது எதிர்பாராவிதமாக சூர்யா(22), பானேஷ்(22), ராகவன்(22), யோகேஸ்வரன்(21), ராகவன்(18) ஆகிய 5 பேரும் ஆழமான இடத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்த செய்தியினைக்கேட்டு வேதனையடைந்தேன். உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன். இவர்கள் குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    மு.க ஸ்டாலின்
    சென்னை

    மு.க ஸ்டாலின்

    கீழடி 9ம் கட்ட அகழாய்வு பணிகளை 6ம் தேதி துவக்கி வைக்கிறார் தமிழக முதல்வர் சிவகங்கை
    தமிழகத்தை குப்பைத்தொட்டியாக பயன்படுத்தும் கேரளா: முதல்வர் ஏன் கண்டிக்கவில்லை, பாஜக தலைவர் கேள்வி பாஜக
    ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளா

    சென்னை

    விஜய் யேசுதாஸ் வீட்டில் திருட்டு சம்பவம்: புதியதாக ஒரு ட்விஸ்ட் கோலிவுட்
    கலாக்ஷேத்ரா விவகாரத்தில், பாடகி சின்மயி காட்டமான ட்விட்டர் பதிவு சின்மயி
    புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு கோவில்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023