NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்
    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்

    சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி பலி - முதல்வர் நிவாரண தொகையில் இருந்து தலா 2 லட்சம்

    எழுதியவர் Nivetha P
    Apr 05, 2023
    06:15 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குளத்திற்கு தீர்த்தவாரி பூஜை செய்ய 25 பேர் பல்லக்கை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர்.

    பல்லக்கில் இருந்த சாமியை நீராட வைத்துவிட்டு, பின்னர் பல்லக்கினை இறக்கி வைத்துவிட்டு அவர்கள் அனைவரும் குளிக்க சென்றதாக தெரிகிறது.

    அப்போது அதில் 5 பேர் மட்டும் மாயமாகியுள்ளனர்.

    இது குறித்து வேளச்சேரி தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் அங்கு விரைந்துவந்து 5 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.

    நீரில் மூழ்கி இறந்த 5 பேரும் அர்ச்சகர்கள் என்பது தெரியவந்துள்ள நிலையில், அவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முதல்வரின் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடல்களை பார்வையிட்டார்.

    ஆழ்ந்த இரங்கல்

    நிவாரண நிதி அறிவித்து அறிக்கை வெளியீடு

    அப்போது அவர், ஒருவரை மீட்க முயன்று அடுத்தடுத்து 5 பேர் ஆழமான இடத்தில் சிக்கி மூழ்கியுள்ளார்கள்.

    இதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே காரணம்.

    பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு முதல்வர் நிச்சயம் உதவி செய்வார் என்றும் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர், இன்று நடந்த கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கியப்பொழுது எதிர்பாராவிதமாக சூர்யா(22), பானேஷ்(22), ராகவன்(22), யோகேஸ்வரன்(21), ராகவன்(18) ஆகிய 5 பேரும் ஆழமான இடத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்த செய்தியினைக்கேட்டு வேதனையடைந்தேன்.

    உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

    இவர்கள் குடும்பத்தாருக்கு முதல்-அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    சென்னை

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    மு.க ஸ்டாலின்

    அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - வெற்றி பெறுவோருக்கு தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் உதயநிதி சார்பில் பல பரிசுகள் மு.க.ஸ்டாலின்
    தமிழக முதல்வர் 70வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி மு.க.ஸ்டாலின்
    சேது சமுத்திர திட்டம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் மு.க.ஸ்டாலின்
    ஜல்லிக்கட்டில் உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

    சென்னை

    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் தமிழ்நாடு
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மஞ்சப்பை திட்டம் குறித்த அறிவிப்பு பட்ஜெட் 2023
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    சென்னையில் ஆவின் பால் கெட்டுப்போன விவகாரம் குறித்து அதிகாரிகள் விளக்கம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025