Page Loader
சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு

எழுதியவர் Nivetha P
Apr 05, 2023
01:53 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயிலில் குளத்திற்கு தீர்த்தவாரி பூஜைசெய்ய 20 பேர் பல்லக்கை தூக்கிக்கொண்டு சென்றுள்ளனர். பல்லக்கினை இறக்கி வைத்துவிட்டு அவர்கள் அனைவரும் குளிக்கச்சென்றதாக தெரிகிறது. அப்போது அதில் 5 பேர் மாயமாகியுள்ளனர். இதுகுறித்து வேளச்சேரி தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் அங்கு விரைந்துவந்து 5 பேரின் உடல்களை மீட்டனர். நீரில் மூழ்கி இறந்த 5 பேரும் அர்ச்சகர்கள் என்பது தெரியவந்துள்ள நிலையில், அவரது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சம்பவயிடத்திற்கு வருகைத்தந்த அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடல்களை பார்வையிட்டார். பின்னர் ஒருவரை மீட்கமுயன்று அடுத்தடுத்து 5பேர் ஆழமான இடத்தில் சிக்கி மூழ்கியுள்ளார்கள். பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு முதல்வர் நிச்சயம் உதவிசெய்வார் என்றும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

சென்னை நங்கநல்லூரில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு