NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை
    சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை

    சென்னையில் 1,470 கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை

    எழுதியவர் Nivetha P
    Feb 20, 2023
    05:50 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்வதற்காக மழைநீர் வடிகால் துறையின் சார்பில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருவதோடு, மழைநீர் வடிகால்கள் புனரமைக்கப்பட்டும் வருகிறது.

    இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்களில் இடைஇடையே சட்டவிரோதமாக கழிவுநீர் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் மழை காலங்களில் மழைநீர் செல்ல தடைபட்டு தேங்கி நிற்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளது.

    இதனால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீரை வெளியேற்றும் குடியிருப்புகள் மற்றும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, பிப்ரவரி 4ம் தேதி முதல் 17ம் தேதி வரை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    கள ஆய்வு

    2 வாரங்களில் ரூ.5,09,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது

    மேற்கூறியவாறு குறிப்பிட்ட அந்த 2வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில் 1,470 சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.

    மேலும் 5,09,500ரூபாய் அபராதத்தொகையும் விதிக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து பொதுமக்கள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்களில் கழிவுநீரை வெளியேற்றுவதை தவிர்க்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    இதனை மீறினால் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    சென்னையை பொருத்தவரை, வடிகால்கள் பொதுவாக 7மீட்டர் மற்றும் அதற்குமேல் அகலம் கொண்ட சாலைகளில் மட்டுமே அமைக்கப்படுகின்றன.

    வடிகாலின் அளவு நீர்ப்பிடிப்புபகுதி, நிலத்தின் அமைப்பு மற்றும் வெளியேறும் நீரின் அளவு முதலியன பொறுத்து அமைக்கப்படுகிறது.

    தண்ணீர் தேங்கும் பகுதிகளில் சாலையின் அகலம் எப்படி இருந்தாலும் தண்ணீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில் மழைநீர்வடிகால்கள் வடிவமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

    சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் 2.66 லட்சம் பேர் பயணம் ரயில்கள்
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம் மெரினா கடற்கரை
    சென்னை விமான நிலையத்தில் ரூ.1.59 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் விமானம்
    சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியில் முதல்வர் - மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை வெளியிட்டார் ஸ்டாலின்

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025