NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல்: பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்த மர்ம நபர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல்: பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்த மர்ம நபர்கள்
    குளிர்கால கூட்டத்தொடரில் பரபரப்பு : மக்களவையில் கேலரியில் இருந்து குதித்த மர்ம நபர்

    மக்களவையில் பாதுகாப்பு விதிமீறல்: பார்வையாளர்கள் கேலரியில் இருந்து குதித்த மர்ம நபர்கள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 13, 2023
    02:00 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று, டிசம்பர் 12, பிற்பகல் 1.02 மணியளவில் பாராளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரத்தின் போது அடையாளம் தெரியாத இருவர், கைகளில் மஞ்சள் புகையை உமிழும் புகைக் குப்பிகளை ஏந்திக்கொண்டு, பார்வையாளர்கள் கேலரியில் இருந்து லோக்சபா அறைக்குள் குதித்து ஓடினர்.

    அவையில் இருந்த CCTV-இல் பதிவான காட்சிகள் படி, ஒரு நபர், அடர் நீல நிற சட்டை அணிந்து, பிடிபடுவதை தவிர்ப்பதற்காக மேசைகள் மீது தாவி, சபாநாயகரை நோக்கி ஓடுவது போலவும், மற்றொரு வீடியோ காட்சியில் பார்வையாளர்களின் கேலரியில் புகை வீசி இருப்பது போலவும் பதிவாகியுள்ளது.

    இந்த மர்ம நபர்கள் இருவரையும் எம்.பி.க்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் கைப்பற்றினர்.

    ட்விட்டர் அஞ்சல்

    மக்களவையில் குதித்த மர்ம நபர்

    #WATCH | An unidentified man jumps from the visitor's gallery of Lok Sabha after which there was a slight commotion and the House was adjourned. pic.twitter.com/Fas1LQyaO4

    — ANI (@ANI) December 13, 2023

    card 2

    டெல்லி காவல்துறை விசாரிக்கும் என சபாநாயகர் அறிவித்தார் 

    அதன்பின்னர், மக்களவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் தொடங்கியது. அப்போது, சபாநாயகர் ஓம் பிர்லா சுருக்கமான அறிக்கையை வெளியிட்டார். "இந்த விஷயத்தை விசாரித்து வருகிறோம். தீவிர விசாரணைக்கு உத்தரவிடுமாறு டெல்லி காவல்துறையைக் கேட்டுள்ளோம்," என்று அவர் அவையில் இருந்த எம்.பி.க்களிடம் கூறினார்.

    முன்னதாக, ANI செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட அதிர்ச்சியூட்டும் காட்சிகளில், மர்ம ஆசாமிகள் குதிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு, அமைதியாக நடைபெற்று கொண்டிருந்த அவையில், திடீரென யாரோ, "அவரைப் பிடிக்கவும், அவரைப் பிடிக்கவும்" என்ற கூச்சலிடுவது கேட்கிறது.

    அப்போது அவையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, அனுப்ரியா படேல் ஆகியோரும் இருந்துள்ளனர்.

    card 3

    22 ஆண்டுகளுக்கு முன்னர்..

    இந்தியாவின் நாடாளுமன்றத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடைபெற்று, இன்றுடன் 22 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.

    இந்த சூழலில் இந்தியாவின் பிரதான மக்களவை மன்றத்தில் இது போன்ற பாதுகாப்பு குறைபாடு இருப்பது பலரையும் யோசிக்க வைத்துள்ளது.

    மேலும், காலிஸ்தான் பிரிவினைவாதி பண்ணுன் சில தினங்களுக்கு முன்னர், இந்த நாடாளுமன்ற தாக்குதலின் நினைவு தினத்தை முன்னிட்டு, மற்றுமொரு தாக்குதல் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்தும் குறிப்பிடத்தக்கது.

    தற்போது கைது செய்யப்பட்டுள்ள அந்த மர்ம நபர்களுக்கும், இந்த அச்சுறுத்தலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது போலீஸ் விசாரணைக்கு பின்னர் தெரியவரும்.

    card 4

    சம்பவத்தை நேரில் கண்ட மக்களவை உறுப்பினர்கள் கூறுவது என்ன?

    பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலி, என்டிடிவியிடம் தெரிவித்ததால் படி, பிடிபட்ட நபர்களின் பார்வையாளர் அனுமதிச் சீட்டு மீட்கப்பட்டதாகவும், அது பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவின் அலுவலகத்தால் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

    எவ்வாறாயினும், எந்த எம்.பி அலுவலகம் அனுமதிச் சீட்டை வழங்கினாலும், எந்தவொரு பார்வையாளர்களும், பாராளுமன்றத்திற்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன் ஐந்து நிலை பாதுகாப்பை தாண்டி தான் வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், "பார்வையாளர்கள் கேலரியில் இருந்து யாரோ கீழே விழுந்ததாக முதலில் நினைத்தேன். இரண்டாவது நபர் குதித்த பிறகுதான் அது பாதுகாப்புக் கோளாறு என்பதை உணர்ந்தேன்... வாயு விஷமாக இருந்திருக்கலாம்," என்று அவர் முழுமையான விசாரணைக்கு அழைப்பு விடுத்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்

    நாடாளுமன்றம்

    நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்: நாட்டையே உலுக்கப்போகும் அறிவிப்புகள் நாளை வெளியாகுமா? இந்தியா
    பழைய நாடாளுமன்றத்தின் நினைவுகளை உருக்கமான கடிதங்களாக எழுதிய 10 பெண் எம்.பி.க்கள் இந்தியா
    'சிறப்பு கூட்டத்தொடரில் வரலாற்று முடிவுகள் எடுக்கப்படும்': பிரதமர் மோடி  இந்தியா
    உருக்கமான உரையுடன் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025