NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பஞ்சாப் இந்து தலைவரின் கொலை வழக்கில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பஞ்சாப் இந்து தலைவரின் கொலை வழக்கில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல் 

    பஞ்சாப் இந்து தலைவரின் கொலை வழக்கில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்திற்கு தொடர்பு இருப்பதாக தகவல் 

    எழுதியவர் Sindhuja SM
    Apr 18, 2024
    03:02 pm

    செய்தி முன்னோட்டம்

    பஞ்சாப் மாநிலம் நங்கலில் விஸ்வ ஹிந்து பரிஷத்(விஎச்பி) தலைவர் விகாஸ் பக்கா கொலை வழக்கில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ சம்பந்தப்பட்ட சதியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    விஎச்பியின் நங்கல் பிரிவின் தலைவரான விகாஸ் பக்கா, சனிக்கிழமை மாலை ரூப்நகர் ரயில் நிலையம் அருகே உள்ள அவரது கடையில் அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    இந்த கொலை தொடர்பாக மன்தீப் குமார் மற்றும் சுரேந்திர குமார் ஆகிய இரு சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    ருப்நகர் காவல்துறை மற்றும் மாநில சிறப்பு அதிரடிப் பிரிவு விகாஸ் கொலை வழக்கை மூன்றே நாட்களுக்குள் தீர்த்துவிட்டதாக காவல்துறை தலைமை இயக்குநர் கௌரவ் யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

    பஞ்சாப்

    துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு ரூ.70,000 கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது

    "ஒரு பெரிய திருப்புமுனையாக, ரூப்நகர் காவல்துறை SSOC மொஹாலியுடன் கூட்டு நடவடிக்கையில், பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத மூளைகளின் ஆதரவுடன் ஒரு பயங்கரவாத தொகுதியின் 2 செயல்பாட்டாளர்களை கைது செய்ததன் மூலம் விகாஸ் கொலை வழக்கை 3 நாட்களுக்குள் தீர்த்துள்ளது" என்று அப்பகுதி டிசிபி ட்விட்டரில் கூறியுள்ளார்.

    ஐஎஸ்ஐக்கும் பஞ்சாபில் உள்ள சில இளைஞர்களுக்கும் இடையே தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    ஐஎஸ்ஐ வேலையில்லாதவர்களை பணம் மற்றும் போதைப்பொருள் மூலம் கவர்ந்திழுத்து, பஞ்சாபில் கொலைகளை நடத்த அவர்களை ஸ்லீப்பர் செல்களாக நியமித்து வருவதாக கூறப்படுகிறது.

    விகாஸ் பக்காவை கொலை செய்ய துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு ரூ.70,000 கொடுக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

    இந்த தாக்குதலுக்கான உத்தரவு போர்ச்சுகலில் உள்ள ஐஎஸ்ஐ அமைப்பினரிடமிருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பஞ்சாப்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    பஞ்சாப்

    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: ஒரு ராணுவ வீரர் கைது  இந்தியா
    முகத்தில் தேசிய கொடி வரைந்திருந்ததால் பொற்கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு  இந்தியா
    காலிஸ்தான் தலைவர் அம்ரித்பாலின் மனைவி கைது செய்யப்பட்டார்  இந்தியா
    அசாம் சிறையில் அடைக்கப்பட்டார் காலிஸ்தான் தலைவர் அம்ரித்பால் சிங் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025