NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு
    இந்தியா

    சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு

    சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு
    எழுதியவர் Nivetha P
    Jan 19, 2023, 07:15 pm 0 நிமிட வாசிப்பு
    சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு
    800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம், 2 புலிக்குத்தி கற்கள், நந்தி சிலைகள் கண்டெடுப்பு

    ஈரோடு மாவட்டம், சத்யமங்கலம் அடுத்த புதூர் கிராமத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தோட்ட வேலையின் பொழுது, தோட்டத்தின் நடுவில் கல்லினால் ஆன சிவலிங்கம், 2 புலிக்குத்தி நடுகற்கள் மற்றும் நந்தி சிலைகள் புதைந்து கிடப்பதை கவனித்த முனுசாமி, கோவையை சேர்ந்த அரண் பணி அறக்கட்டளைக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து விவசாய நிலத்திற்கு விரைந்து வந்த அறக்கட்டளை குழுவினர் கிராம மக்கள் உதவியுடன் மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கம், 2 புலிக்குத்தி நடுக்கற்களை வெளியே எடுத்தனர். இதனையடுத்து அங்கிருந்த மரத்தடியில் பீடம் அமைத்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க சிலையை வைத்து பூஜை செய்து வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    கோவை அரண் பணி அறக்கட்டளை குழுவினர் தகவல்

    இது குறித்து கோவை அரண் பணி அறைக்கட்டளை குழுவினர் கூறுகையில், இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள சிவலிங்கம் ஆதார பீடம் கொண்டு மூன்றடி உயரம் இரண்டடி விட்டம் கொண்டுள்ளது. சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதற்கு அருகிலேயே 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த செங்கற்கள் காணப்பட்டது, அதன் அருகில் மூன்று நந்தி சிலைகளும், 2 புலிக்குத்தி நடுக்கற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் வனப்பகுதி அருகேயுள்ள இப்பகுதியில் 800 ஆண்டுகளுக்கு முன்னரே புலிகள் நடமாட்டம் இருந்திருக்கக்கூடும், கால்நடைகளை வேட்டையாட வந்த புலிகளை சண்டையிட்டு வீரர்கள் இறந்ததால் அதன் நினைவாக இவ்வாறு புலி குத்தி நடுகற்கள் நடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாக அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் தற்போது அந்த பகுதி முழுவதும் தோண்டி எடுக்கப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    தமிழ்நாடு

    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் மாவட்ட செய்திகள்
    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்? இந்தியா
    மேங்கோ பைட், கோகோ மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்..இதெல்லாம் கேட்டதும் உங்கள் நினைவு வருவது என்ன? வைரல் செய்தி
    தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை தொகை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மு.க ஸ்டாலின்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023