NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு
    800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம், 2 புலிக்குத்தி கற்கள், நந்தி சிலைகள் கண்டெடுப்பு

    சத்தியமங்கலம் அருகே விவசாய நிலத்தில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த சிவலிங்கம் கண்டெடுப்பு

    எழுதியவர் Nivetha P
    Jan 19, 2023
    07:15 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு மாவட்டம், சத்யமங்கலம் அடுத்த புதூர் கிராமத்தில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தோட்ட வேலையின் பொழுது, தோட்டத்தின் நடுவில் கல்லினால் ஆன சிவலிங்கம், 2 புலிக்குத்தி நடுகற்கள் மற்றும் நந்தி சிலைகள் புதைந்து கிடப்பதை கவனித்த முனுசாமி, கோவையை சேர்ந்த அரண் பணி அறக்கட்டளைக்கு தகவல் அளித்துள்ளார்.

    இதனையடுத்து விவசாய நிலத்திற்கு விரைந்து வந்த அறக்கட்டளை குழுவினர் கிராம மக்கள் உதவியுடன் மண்ணில் புதைந்து கிடந்த சிவலிங்கம், 2 புலிக்குத்தி நடுக்கற்களை வெளியே எடுத்தனர்.

    இதனையடுத்து அங்கிருந்த மரத்தடியில் பீடம் அமைத்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்க சிலையை வைத்து பூஜை செய்து வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

    இதனை சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.

    3 நந்தி சிலைகள்

    கோவை அரண் பணி அறக்கட்டளை குழுவினர் தகவல்

    இது குறித்து கோவை அரண் பணி அறைக்கட்டளை குழுவினர் கூறுகையில், இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள சிவலிங்கம் ஆதார பீடம் கொண்டு மூன்றடி உயரம் இரண்டடி விட்டம் கொண்டுள்ளது.

    சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதற்கு அருகிலேயே 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த செங்கற்கள் காணப்பட்டது,

    அதன் அருகில் மூன்று நந்தி சிலைகளும், 2 புலிக்குத்தி நடுக்கற்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    சத்தியமங்கலம் வனப்பகுதி அருகேயுள்ள இப்பகுதியில் 800 ஆண்டுகளுக்கு முன்னரே புலிகள் நடமாட்டம் இருந்திருக்கக்கூடும்,

    கால்நடைகளை வேட்டையாட வந்த புலிகளை சண்டையிட்டு வீரர்கள் இறந்ததால் அதன் நினைவாக இவ்வாறு புலி குத்தி நடுகற்கள் நடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுவதாக அவர்கள் கூறியுள்ளார்கள்.

    மேலும் தற்போது அந்த பகுதி முழுவதும் தோண்டி எடுக்கப்படும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிபிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    தமிழ்நாடு-தமிழகம் சர்ச்சை: என்ன நடக்கிறது ட்விட்டரில்? திமுக
    தஞ்சை திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா - வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு தஞ்சை பெரிய கோவில்
    2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை! இந்தியா
    "தமிழக ஆளுநருக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்": சுப்ரமணியன் சுவாமி இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025