NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை 
    தெலுங்கானாவில் கனமழை - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை

    தெலுங்கானா கனமழை எதிரொலி - உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை 

    எழுதியவர் Nivetha P
    Jul 29, 2023
    11:32 am

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானா மாநிலத்தில் வரலாறு காணாத மழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    இதனால் பல கிராமங்கள் இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலமும் படகுகள் மூலமும் மீட்பு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்திய வானிலை அறிக்கை படி, மேகவெடிப்பு காரணமாக பெய்த இந்த கனமழையால் முலுகு மற்றும் பூபாலப்பள்ளி மாவட்டங்களில் அதிகளவு மழை பெய்துள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதே போல் ஹைதராபாத், வாரங்கல் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.

    மேலும் நேற்றைய நிலவரப்படி கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் மீட்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    கனமழை 

    மீட்பு பணிகளுக்கான தேவைகளை செய்து தருவதாக உறுதியளித்த பிரதமர் 

    தெலுங்கானாவில் தற்போது வரலாறு காணாத பேய் மழை கொட்டி தீர்த்ததில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன்படி நீரில் அடித்து செல்லப்பட்டவர்களுள் இதுவரை 9 பேரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

    தற்போது மழை பெரும்பாலான இடங்களில் நின்ற நிலையிலும் வெள்ளம் வடியாமல் உள்ளதால், ஹெலிகாப்டர் மூலம் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தேசிய பேரிடர் மீட்புக்குழு வழங்கி வருகிறது.

    இதற்கிடையே மீட்பு பணிகளுக்கான அனைத்து தேவைகளையும் செய்து தருவதாக பிரதமர் மோடி உறுதி தெரிவித்துள்ளார் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நேற்று(ஜூலை.,29) கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மழை
    தெலுங்கானா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    மழை

    வட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழை; ஹரியானா துணை முதல்வர் வீட்டிற்குள் புகுந்த வெள்ள நீர் டெல்லி

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து முதல் அமைச்சர்
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது டெல்லி
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா

    பிரதமர் மோடி

    'முதலில் அனைத்து சாதியினரையும் கோவிலுக்குள் அனுமதியுங்கள்': பிரதமர் மோடியை சாடிய திமுக இந்தியா
    இந்திய மக்களுக்கு நற்செய்தி! US விசா நேர்காணல் காத்திருப்பு நேரம் 50 சதவிகிதமாக குறைப்பு ! அமெரிக்கா
    பிரதமர் மோடி தலைமையில் ஜூலை 3 -ஆம் தேதி அமைச்சரவை கூட்டம்; மந்திரி சபையில் மாற்றம் என தகவல் மத்திய அரசு
    பிரதமர் மோடி பங்கேற்கும் டெல்லி பல்கலைக்கழக விழா: கருப்பு சட்டை அணிய தடை டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025