NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை
    இடுக்கி மாவட்டம் பீர்மேட்டில் நேற்று ஒரே நாளில் 100 மி.மீ மழை பெய்துள்ளது.

    கேரளாவில் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், பள்ளிகளுக்கு விடுமுறை

    எழுதியவர் Sindhuja SM
    Jul 05, 2023
    11:46 am

    செய்தி முன்னோட்டம்

    கேரளாவின் பல இடங்களில் நேற்று கனமழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தன,பல்வேறு இடங்களில் வீடுகள் சேதமடைந்தன.

    இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) இடுக்கி, காசர்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மீதமுள்ள 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எர்ணாகுளம், கண்ணூர், இடுக்கி, திருச்சூர், கோட்டயம், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இடுக்கி மாவட்டம் பீர்மேட்டில் நேற்று ஒரே நாளில் 100 மி.மீ மழை பெய்துள்ளது.

    பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என காசர்கோடு ஆட்சியர் அறிவித்துள்ள நிலையில், பத்தனமத்திட்டா மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் தற்காலிக நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.

    பஹ்வ்

    அனைத்து தாலுகாக்களிலும் அவசர சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன

    எனவே, நிவாரண முகாம்களாக செயல்பட்டு வரும் மாவட்ட பள்ளிகள் மூடப்பட்டது.

    நிலைமையை சமாளிக்க, வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் தலைமையில், மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளின் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.

    இது குறித்து தனது முகநூல் பதிவில் பேசி இருந்த அமைச்சர் கே.ராஜன், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், ஆனால், பீதி அடையத் தேவையில்லை என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

    வருவாய்த் துறையும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும் துல்லியமான தகவல்களை அளித்து வருவதாகவும், அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    மேலும், இந்த உயர்மட்ட கூட்டத்தை அடுத்து, அனைத்து தாலுகாக்களிலும் அவசர சிகிச்சை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேரளா
    இந்தியா
    கனமழை
    வானிலை ஆய்வு மையம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    கேரளா

    பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு இந்தியா
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் - தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!  வந்தே பாரத்
    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 1000 கலைஞர்கள் ஆடிய வள்ளி கும்மியாட்டம் - தமிழக அரசுக்கு வலியுறுத்தல்  தமிழக அரசு
    கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை வழித்தடம்!  வந்தே பாரத்

    இந்தியா

    வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு  வணிகம்
    இந்தியாவில் ஒரே நாளில் 40 கொரோனா பாதிப்பு கொரோனா
    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றம்
    எச்டிஎஃப்சி வங்கியுடன் இணையும் எச்டிஎஃப்சி.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியத் தகவல்கள் ஹெச்டிஎஃப்சி

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை தமிழ்நாடு
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு

    வானிலை ஆய்வு மையம்

    11 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தீவிரமடையும்: வானிலை ஆய்வு மையம் இந்தியா
    கேரளாவில் பருவமழை தொடங்கியது: தமிழகத்திலும் மழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    'பிப்பர்ஜாய்' புயல் அடுத்த 36 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025