NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் கங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் கங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம் 
    தமிழகத்தில் கங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம்

    தமிழகத்தில் கங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம் 

    எழுதியவர் Nivetha P
    May 31, 2023
    07:50 pm

    செய்தி முன்னோட்டம்

    திருவண்ணாமலை மாவட்டம், கணியம்பாடி அருகிலுள்ள சோழவரம் துத்திக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது கங்கையம்மன் கோயில்.

    இந்த கோயில் திருவிழா காரணமாக சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தது.

    இதனையடுத்து பகலில் கூழ்வார்க்கும் திருவிழா மற்றும் இரவில் கங்கையம்மன் சிரசு ஊர்வலம் ஆகியன நடந்தது.

    இதன் பின்னர், கோயிலிலுள்ள அம்மன் உடலில் சிரசினை பொருத்தி கண் திறப்பு செய்யும் விழாவும் மிக சிறப்பாக அரங்கேறியது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

    கோயிலில் கூடிய பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதையடுத்து, புலிவேஷம், கொக்கலிக்கட்டை போன்ற ஆட்டத்தினை அங்கு கூடிய பக்தர்கள் ஆடினர்.

    இந்த திருவிழாவை முன்னிட்டு இரவில் நாடகமும் நடந்தது.

    திருவிழா 

    பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் 

    மேலும், வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் கங்கையம்மன் கோயிலிலும் மேற்கூறியவாறு சிரசு திருவிழா மிக விமர்சையாக நடத்தப்பட்டுள்ளது.

    கடந்த 28ம்தேதி கூழ் வார்த்தல் நிகழ்வும், 29ம்தேதி பொங்கல் வைத்து பூஜைகளும் செய்யப்பட்டுள்ளது.

    இதனைத்தொடர்ந்து நேற்று(மே.,30) காலை 6 மணிக்கு கங்கையம்மன் சிரசு ஊர்வலமானது நடந்தது.

    அம்மனின் சிரசு தாரை தப்பட்டை முழங்க வீதியெங்கும் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

    இந்த ஊர்வலத்தின் பொழுது பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செய்தனர்.

    அம்மனுக்கு பூக்கள், காசு மாலை உள்ளிட்டவை சாற்றி வேண்டுதல் வைத்தனர்.

    இதன்பின்னர் கோயிலுக்குள்சென்ற அம்மன் சிரசு ஊஞ்சலில் வைத்து தாலாட்டு செய்யப்பட்டது.

    கோயிலினை மூன்றுமுறை வலம் வந்த அம்மனின் சிரசு பொருத்தப்பட்டது.

    அங்குக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருவண்ணாமலை
    திருவிழா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாட்டம் பர்வதமலை
    பர்வதமலையில் சாலை மற்றும் ரோப் கார் வசதி அமைக்க திட்டம் - ட்ரோன் கேமரா மூலம் ஆய்வு பர்வதமலை
    பூட்டை உடைத்து ஒடுக்கப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்ற மாவட்ட ஆட்சியர் தமிழ்நாடு
    திருவண்ணாமலையில் 4 ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளை - தனிப்படைகள் அமைத்து காவல்துறை தேடல் காவல்துறை

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025