NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்தியா இலவச சிகிச்சை: குடியரசு தலைவர் அறிவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்தியா இலவச சிகிச்சை: குடியரசு தலைவர் அறிவிப்பு
    ஜனாதிபதி திரௌபதி முர்மு நாடாளுமன்றத்தில் இதனைத்தெரிவித்தார்

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்தியா இலவச சிகிச்சை: குடியரசு தலைவர் அறிவிப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 27, 2024
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு அரசு இலவச சிகிச்சை அளிக்கும் என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு வியாழக்கிழமை (ஜூன் 27) தெரிவித்தார்.

    நாடாளுமன்றத்தில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றும் போது இந்த தகவலை தெரிவித்தார்.

    "எனது அரசாங்கம் மேலும் ஒரு முடிவை எடுக்கப் போகிறது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையின் பலனைப் பெறுவார்கள்," என்று அவர் 18வது மக்களவையில் தனது முதல் உரையில் கூறினார்.

    ஆயுஷ்மான் பாரத் திட்டம்

    ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் விரிவாக்கமாக பார்க்கப்படுகிறது இந்த இலவச சிகிச்சை

    ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா (AB-PMJAY) என்பது உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டமாகும்.

    இது ஒரு குடும்பத்திற்கு, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனையில் ஆண்டுக்கு ₹5 லட்சம் வரை காப்பீடு வழங்குகிறது.

    தற்போது, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் கவரேஜை விரிவுபடுத்துவது, மத்திய சுகாதார அமைச்சகத்திற்கான மோடியின் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சி நிரல்களில் ஒன்றாகும்.

    முதற்கட்டமாக அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் 70 வயதுக்கு மேற்பட்டவர்களின் தரவுகளை சேகரிப்பார்கள் என மின்ட் தெரிவித்துள்ளது.

    மற்ற திட்டங்கள்

    இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகும் மருத்துவ திட்டங்கள்

    வழக்கமான தடுப்பூசிகளை டிஜிட்டல் மயமாக்குவதற்காக U-WIN போர்ட்டலை இந்தியா முழுவதும் வெளியிடவும் சுகாதாரத்துறை அமைச்சகம் யோசித்து வருகிறது.

    மேலும், ட்ரோன் சேவைகளைப் பயன்படுத்தி, கடினமான நிலப்பரப்புகளில் AIIMS மற்றும் பிற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களிலிருந்து மருத்துவத் தேவைகளை வழங்குதல் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பணமில்லா சிகிச்சை சேவைகளை வழங்குதல் ஆகிய எதிர்கால திட்டங்களும் NDA ஆட்சியில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாஜக தனது தேர்தல் அறிக்கையில், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் திருநங்கைகள் அனைவரும் சுகாதாரத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் ஒரு பாதி நிறைவேறவுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குடியரசு தலைவர்
    நாடாளுமன்றம்
    மருத்துவம்
    திரௌபதி முர்மு

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    குடியரசு தலைவர்

    நாடாளுமன்றத்தை கலைத்தார் போர்ச்சுகல் அதிபர், மார்ச் 10ல் மீண்டும் தேர்தல் போர்ச்சுகல்
    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அமெரிக்க அரசு மீண்டும் முடங்கும் அபாயம் அமெரிக்கா
    அல்-ஷிஃபா மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்- ஜோ பைடன் காசா

    நாடாளுமன்றம்

    "ஹிந்தி தெரியணும்" - நிதீஷ் குமார் பேச்சால் இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு திமுக
    பாதுகாப்பு விதிமீறலில் கைது செய்யப்பட்ட கர்நாடக சாப்ட்வேர் என்ஜினீயர், ஓய்வு பெற்ற காவலதிகாரியின் மகன் கர்நாடகா
    நாடாளுமன்றத்தில் அத்துமீறல் - பாதுகாப்பு பணி சி.ஐ.எஸ்.எப். வசம் ஒப்படைப்பு  மக்களவை
    தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா மக்களவையில் நிறைவேற்றம் இந்தியா

    மருத்துவம்

    AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் மனநல சிகிச்சை.. புதிய ஆய்வு! செயற்கை நுண்ணறிவு
    இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது இந்தியா
    மரபணு மாற்றப்பட்ட கொசுக்கள் மூலமாக மலேரியாவை ஒழிக்க முடியும்! மலேரியா
    தேசிய மருத்துவர் தினம் 2023: வரலாறும் முக்கியத்துவமும் இந்தியா

    திரௌபதி முர்மு

    தமிழகத்தை சேர்ந்த இரு பாம்பு பிடி வீரர்களுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு! பத்மஸ்ரீ விருது
    பத்ம விருதுகள் 2023: கலைத்துறையில் விருது பெற்றவர்களின் விவரங்கள் பத்மஸ்ரீ விருது
    ஜனாதிபதி மாளிகை தோட்டத்தின் பெயர் மாற்றம் இந்தியா
    பட்ஜெட் கூட்டதொடரில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முக்கிய வாக்கியங்கள் பட்ஜெட் 2023
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025