NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

    எழுதியவர் Sekar Chinnappan
    Dec 28, 2024
    02:16 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் முழு அரசு மரியாதையுடன் புது தில்லியில் உள்ள நிகம்போத் காட்டில் சனிக்கிழமை (டிசம்பர் 28) தகனம் செய்யப்பட்டது.

    இந்த நிகழ்வில் ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து தொடங்கியது. அங்கு ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

    மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது அணிவகுப்பில் காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

    சீர்திருத்தச் சிற்பி

    இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தச் சிற்பி

    முன்னதாக, மன்மோகன் சிங்கின் உடல் 3, மோதிலால் நேரு சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சனிக்கிழமை காலை காங்கிரஸ் தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

    அவரது மனைவி குர்ஷரன் கவுர் மற்றும் அவர்களது மகள் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

    இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி என்று போற்றப்படும் மன்மோகன் சிங், வயது தொடர்பான நோய்களால் தனது 92வது வயதில் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு காலமானார்.

    2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றிய சிங், நாட்டின் பொருளாதாரத்தை மாற்றியமைப்பதில் அவரது முக்கிய பங்கிற்காக நினைவுகூரப்படுகிறார்.

    பூட்டான்

    பூட்டான் மன்னர் நேரில் அஞ்சலி

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் மொரீஷியஸ் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் சனிக்கிழமை இந்தியா வந்தனர்.

    முன்னதாக, முன்னாள் பிரதமரின் உடல் இறுதிச் சடங்குகளுக்காக டெல்லியில் உள்ள நிகம்போத் காட் மயானத்திற்கு சென்றடைந்தது. நிகம்போத் காட்டில் அவரது இறுதிச் சடங்கின் போது வாங்சுக் சிங்கின் உடல் மீது மலர்வளையம் வைத்தார்.

    முன்னாள் இந்தியப் பிரதமருக்கு மரியாதை செலுத்தும் வகையில் மொரீஷியஸ் தனது தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று சனிக்கிழமை செய்திக் குறிப்பில் அறிவித்தது.

    இதற்கிடையே, மன்மோகன் சிங்கைக் கவுரவிக்கும் வகையில் ஏழு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மன்மோகன் சிங்
    இந்தியா
    காங்கிரஸ்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மன்மோகன் சிங்

    'கௌரவத்தை குறைக்கும் முதல் பிரதமர்...': மோடியை கடுமையாக சாடிய மன்மோகன் சிங் நரேந்திர மோடி
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி எய்ம்ஸ்
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் காலமானார் இந்தியா
    'வரலாறு எனக்கு அன்பாக இருக்கும் என நம்புகிறேன்': வைரலான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பேச்சு! எய்ம்ஸ்

    இந்தியா

    2025 ஜனவரி முதல் பிரைம் வீடியோவுக்கான பயன்பாட்டு விதிகளில் திருத்தம்; அமேசான் அறிவிப்பு அமேசான் பிரைம்
    இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 652.869 பில்லியன் டாலராக குறைவு; ஆர்பிஐ தகவல் ஆர்பிஐ
    எல்&டி நிறுவனத்தினிடம் இருந்து ₹7,628 கோடிக்கு கே9 வஜ்ரா பீரங்கி வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் இந்திய ராணுவம்
     பிஎஃப் சந்தாதாரர்களுக்கு; இ-வாலட்களிலும் உடனடியாக பிஎஃப் பணத்தை பெறும் வசதி 2025இல் அறிமுகம் வருங்கால வைப்பு நிதி

    காங்கிரஸ்

    என்டிஏ அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் மாணவர் பிரிவு உறுப்பினர்கள், உள்ளே இருந்து பூட்டு போட்டனர் டெல்லி
    நாடாளுமன்ற அமர்வு 2024: எதிர்கட்சியினரின் அமளியால் ஜூலை 1 வரை ஒத்திவைக்கப்பட்ட மக்களவை நாடாளுமன்றம்
    பாஜக கூட்டணி கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளார்  இந்தியா
    இடைத்தேர்தல்கள்: காங்கிரஸ் கூட்டணி 10 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் வெற்றி  இடைத்தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025