
கேரள முன்னாள் முதல்வரும், மூத்த சிபிஎம் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார்
செய்தி முன்னோட்டம்
கேரள முன்னாள் முதல்வரும், இந்தியாவின் மிக மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் திங்கட்கிழமை காலமானார். அவருக்கு வயது 101. நீண்டகால உடல்நலக் குறைவு காரணமாக, அவர் சிகிச்சை பெற்றுவந்தார். VS என்று அழைக்கப்படும் வேலிக்கக்காத்து சங்கரன் அச்சுதானந்தன், 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராகப் பணியாற்றினார். மேலும் பல தசாப்தங்களாக CPM-இன் முக்கிய தலைவராக இருந்தார். கேரள சட்டமன்றத்தில் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய அச்சுதானந்தன், 15 ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்தார். அவர் 1985 முதல் 2009 வரை சிபிஎம் பொலிட்பீரோ உறுப்பினராக இருந்தார், அதன்பிறகு அவர் கட்சியின் மத்திய குழுவிற்கு மாற்றப்பட்டார். அன்னாரது மறைவிற்கு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Red Salute to Comrade V. S. Achuthanandan!
— CPI (M) (@cpimspeak) July 21, 2025
Veteran communist leader and Former Kerala Chief Minister V. S. Achuthanandan passed away at the age of 101 on July 21. His life of struggle and unwavering dedication to the cause of the people will forever be an inspiration. pic.twitter.com/lfEDkh1PTC
வாழ்க்கை
அச்சுதானந்தன் அரசியல் வாழ்க்கை
1923 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி ஆலப்புழாவில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த அச்சுதானந்தன், இளம் வயதிலேயே பெற்றோரை இழந்து, தையல் கடையிலும், பின்னர் ஒரு தென்னை நார் தொழிற்சாலையிலும் வேலை செய்யத் தொடங்கி, கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். 1964 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து (CPI) பிரிந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவான 32 தலைவர்களில் ஒருவரானார். 2006 ஆம் ஆண்டு, தனது 82 வயதில், கேரளாவில் சிபிஐ(எம்) கட்சியை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டு வந்து, 2011 வரை மாநில முதலமைச்சராகப் பணியாற்றினார். 1965 முதல் 2016 வரை பத்து முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, ஏழு முறை வெற்றி பெற்றார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
We pay homage to Comrade #VSAchuthanandan, the voice of the toiling masses. pic.twitter.com/NupR6XeLKP
— CPI (M) (@cpimspeak) July 21, 2025