NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை!
    அடுத்த செய்திக் கட்டுரை
    திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை!
    திமுக முன்னாள் எம்பி கே.எஸ்.மஸ்தான்(படம்: The Indian Express)

    திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2022
    04:14 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் எம்பி கே.எஸ்.மஸ்தான் மரணமடைந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு, அவரது மரணம் இயற்கையல்ல கொலை என்பதைக் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இதனையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

    டிசம்பர் 22ஆம் தேதி, மஸ்தான் திருச்சிக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அங்கு அவர் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டது.

    ஆனால், அவர் இறந்த உடனேயே, அவரது மகன், சந்தேகத்தின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

    சந்தேக மரணம் என எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிப்புற காயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் சந்தேக நபர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    30 Dec 2022

    விசாரணையில் திருப்புமுனை!

    மஸ்தானுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் நிதிப் பிரச்சனை இருந்ததாகவும், அதுவே அவரது கொலைக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    "சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் மஸ்தானுக்குக் கொடுத்த பணத்தைக் கேட்டு அவரைத் தாக்கியுள்ளனர். அவர் மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது" என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

    அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.

    மஸ்தான் கொலையில் தொடர்புடைய இம்ரான், சுல்தான், நசீர், தௌபீக் மற்றும் டிரைவர் லோகேஷ் ஆகியோரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்துள்ளனர்.

    விசாரணைக்குப் பின், மஸ்தானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக, மஸ்தானின் டிரைவர் நாடகம் நடத்தியது போலீசாருக்கு தெரியவந்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    திமுக

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் தமிழ்நாடு
    காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி! தமிழ்நாடு
    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின்

    தமிழ்நாடு

    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்
    55 கோடி மதிப்பிளான நிலம் - முன்னாள் அமைச்சர் ஆ.ராசா பினாமி சொத்துக்கள் முடக்கம்! அரசியல் நிகழ்வு
    குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025