NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை!
    இந்தியா

    திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை!

    திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 31, 2022, 04:14 pm 0 நிமிட வாசிப்பு
    திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை!
    திமுக முன்னாள் எம்பி கே.எஸ்.மஸ்தான்(படம்: The Indian Express)

    முன்னாள் எம்பி கே.எஸ்.மஸ்தான் மரணமடைந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு, அவரது மரணம் இயற்கையல்ல கொலை என்பதைக் காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து, இதில் சம்பந்தப்பட்ட நான்கு பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். டிசம்பர் 22ஆம் தேதி, மஸ்தான் திருச்சிக்கு பயணம் செய்து கொண்டிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டார் என்று கூறப்பட்டது. ஆனால், அவர் இறந்த உடனேயே, அவரது மகன், சந்தேகத்தின் அடிப்படையில் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சந்தேக மரணம் என எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிப்புற காயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் சந்தேக நபர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    விசாரணையில் திருப்புமுனை!

    மஸ்தானுக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் நிதிப் பிரச்சனை இருந்ததாகவும், அதுவே அவரது கொலைக்கு காரணமாக இருந்திருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்தனர். "சில ஆண்டுகளுக்கு முன் அவர்கள் மஸ்தானுக்குக் கொடுத்த பணத்தைக் கேட்டு அவரைத் தாக்கியுள்ளனர். அவர் மயங்கி விழுந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது" என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. மஸ்தான் கொலையில் தொடர்புடைய இம்ரான், சுல்தான், நசீர், தௌபீக் மற்றும் டிரைவர் லோகேஷ் ஆகியோரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணைக்குப் பின், மஸ்தானுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக, மஸ்தானின் டிரைவர் நாடகம் நடத்தியது போலீசாருக்கு தெரியவந்தது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திமுக

    சமீபத்திய

    பாரத் 6ஜி சேவை இந்தியாவில் தொடக்கம் - எப்போது கிடைக்கும்? தொழில்நுட்பம்
    மகளிர் ஐபிஎல் 2023 : எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs உ.பி.வாரியர்ஸ் பலப்பரீட்சை மகளிர் ஐபிஎல்
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு ஆதார் புதுப்பிப்பு
    19, 000 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்த ஐடி நிறுவனமான Accenture! ஆட்குறைப்பு

    தமிழ்நாடு

    ராகுல்காந்திக்கு சிறை தண்டனை - எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் காங்கிரஸ்
    வைக்கம் விழாவை பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைக்க இருக்கின்றனர் ஸ்டாலின்
    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் விமான சேவைகள்
    தமிழகத்தில் உலக தண்ணீர் தினத்தன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் 22 லட்சம் பேர் பங்கேற்பு இந்தியா

    திமுக

    தமிழகத்தில் ரூ.1000 பெண்கள் உரிமைத் தொகை யார் யாருக்கு என்பது குறித்து அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் தமிழ்நாடு செய்தி
    தமிழக பட்ஜெட் 2023: விவேகமான நிதி நிர்வாகத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்நாடு
    புதுச்சேரியில் துப்புரவு பணியாளர்களுக்கு ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் கொடுத்த எம்.எல்.ஏ. புதுச்சேரி
    ஓபிஎஸ் வீட்டிற்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஓபிஎஸ் கட்சி தாவுவதற்கு வாய்ப்பிருக்கிறதா தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023