NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா
    அடுத்த செய்திக் கட்டுரை
    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா
    இவை காவலில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் அல்ல: கௌஹாத்தி உயர் நீதிமன்றம்

    அசாம்: போக்ஸோ சட்டத்தின் கீழ் குழந்தை திருமண வழக்குகள் வருமா

    எழுதியவர் Sindhuja SM
    Feb 15, 2023
    01:30 pm

    செய்தி முன்னோட்டம்

    அசாமில் குழந்தைத் திருமணங்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைப் பற்றி கௌஹாத்தி உயர் நீதிமன்றத்திடம் துளைக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

    தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் படி, அசாம் மாநிலத்தில் 20-24 வயதுக்குட்பட்ட 31.8 சதவீதம் பெண்கள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர். இது தேசிய விகிதமான 23.3 சதவீதத்தை விட அதிகமானதாகும்.

    இதனால், சில நாட்களுக்கு முன், குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கு அசாம் அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தது.

    14 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு திருமணம் செய்து வைக்கும் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்திருந்தார்.

    அதன்படி 3000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு தற்காலிக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியா

    எதுக்கு வேண்டுமானாலும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கலாமா: உயர்நீதிமன்றம் காட்டம்

    மேலும், பல குடும்ப தலைவர்கள் கைது செய்யப்பட்டதால், வேலைக்கு செல்லாத பெண்களின் நிலை மோசமானது. இதனால் பலர் போராட்டத்தில் இறங்கினர்.

    போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு முன்-ஜாமீன் வழங்கிய கௌஹாத்தி உயர்நீதிமன்றம், நேற்று(பிப்-14), இவை காவலில் விசாரிக்கப்பட வேண்டிய வழக்குகள் அல்ல என்று குறிப்பிட்டது.

    இந்த விசாரணையின் போது, "எதுக்கு வேண்டுமானாலும் போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கலாமா? இங்கே எதற்கு போக்சோ-சட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது?" என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    மேலும், "இதில் பலாத்கார குற்றச்சாட்டு உள்ளதா?" என்றும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இப்படி பட்ட வழக்குகளைக் காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் இப்படி கைது செய்வதால் பல குடும்பங்கள் பாதிக்கப்டுகின்றன என்றும் கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அசாம்

    சமீபத்திய

    ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் வரலாற்றுச் சாதனைக்கு பிரதமர் மோடி பாராட்டு நீரஜ் சோப்ரா
    பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத் தன்மை; இந்தியாவின் நிலையை உலக நாடுகளுக்கு தெரிவிக்க குழுக்கள் அமைப்பு ஆபரேஷன் சிந்தூர்
    உலக உயர் இரத்த அழுத்தம் தினம் 2025: இளம் இந்தியர்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் சுகாதார நிபுணர்கள் சிறப்பு செய்தி
    கரூர் அருகே கோர விபத்து; சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதியலில் 4 பேர் பலி விபத்து

    இந்தியா

    34,000க்கும் மேற்பட்ட மருந்து பாட்டில்களைத் திரும்பப் பெறுகிறது சன் பார்மா உலகம்
    இந்தியாவின் ஆமை வேக ரயில் இதுதான்! 46 கிமீ பயணிக்க 5 மணிநேரம் ரயில்கள்
    இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலையை திறந்து வைக்கும் பிரதமர்! சிறப்பு அம்சங்கள் என்ன? விரைவு சாலை
    ஆசிய உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரருக்கு வெள்ளிப்பதக்கம்!! தமிழ்நாடு

    அசாம்

    குழந்தை திருமணத்தை முறியடிக்கும் முயற்சி: அசாமில் 1800க்கும் மேற்பட்டோர் கைது இந்தியா
    லியோனார்டோ டிகாப்ரியோவை காசிரங்காவுக்கு அழைத்த அசாம் முதல்வர் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025