NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி
    கடும் பனி மூட்டம்

    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 17, 2022
    12:32 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில், இன்று அதிகாலை கடும் பனி மூட்டம் நிலவியது. இதன் காரணமாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

    இதனால், காலையில் பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளைக்கை எரியவிட்டபடி சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மேலும், சென்னையிலிருந்து புறப்பட்ட புறநகர் ரயில்களும், குறைவான வேகத்திலேயே இயக்கப்பட்டது என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    குறிப்பாக, அரக்கோணம் - சென்னை மார்கமாக செல்லும் ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு மெதுவாக சென்றது.

    நாளை முதல் மார்கழி மாதம் பிறக்கவிருக்கும் நிலையில், இன்றிலிருந்தே பனி மூட்டம் ஆரம்பித்துவிட்டது.

    சென்னையின் புறநகர் பகுதிகளான,வளசரவாக்கம், போரூர்,ராமாபுரம் மற்றும் தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்திலும் பனிமூட்டம் நிறைந்து இருந்தது.

    மேலும் படிக்க

    சென்னையில் நீடிக்கும் கடுமையான பனி மூட்டம்

    இதற்கிடையில், வங்ககடலில் புதியதாக ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதை குறித்து, IMD தெரிவித்துள்ள அறிக்கையில், " ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் கிழக்கு-பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலின் அருகிலுள்ள பகுதிகளில் உருவாகியுள்ளது" என குறிப்பிடபட்டுள்ளது.

    அடுத்த 12 மணி நேரத்தில், மேலும் வலுவடைந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழகத்தை நோக்கி நகரும் போது, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் கனமழை பெய்யும் என்று IMD கணித்துள்ளது.

    இந்த அதிகாலை பனி மூட்டம் இதன் காரணமாக இருக்கக்கூடுமோ என மக்கள் யோசிப்பதாக, செய்திகள் தெரிவிக்கின்றன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை
    வானிலை அறிக்கை
    வெதர்மேன்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! இந்தியா

    சென்னை

    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை

    வானிலை அறிக்கை

    17ஆம் தேதி வரை வெளுத்து கட்டப்போகும் மழை! தமிழ்நாடு

    வெதர்மேன்

    இந்தியாவை உலுக்கப்போகும் வெப்பம்: எச்சரிக்கும் உலகவங்கி மன அழுத்தம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025