உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு பணிகள்: 'எலி துளை' சுரங்கத் தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியீடு
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்க நேற்று மாலை கையால் கிடைமட்ட துளையிடும் பணி தொடங்கியது. 'எலி துளை' சுரங்கம் தோண்டும் தொழிலாளர்களின் உதவியுடன் கையால் துளையிடும் பணி தொடங்கப்பட்டது. இந்நிலையில், எலி சுரங்கத் தொழிலாளர்கள் கையால் துளையிடும் மீட்பு பணிகளின் முதல் வீடியோ காட்சியை ANI செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. உத்தர்காஷி மீட்பு பணிகள் 17வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கையால் துளையிடும் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் அமெரிக்க ஆஜர் இயந்திரத்தின் மூலம் 800-மிமீ அகலமுள்ள குழாயை இடிபாடுகளுக்குள் செலுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த மீட்பு பணிகள் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில், அதன் மூலம் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்.