NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 100 ஆண்டுகள் நிறைவு: சென்னையின் முதல் உழைப்பாளர் தினக் கொண்டாட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    100 ஆண்டுகள் நிறைவு: சென்னையின் முதல் உழைப்பாளர் தினக் கொண்டாட்டம்
    சென்னையில் 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த முதல் உழைப்பாளர் தினம்

    100 ஆண்டுகள் நிறைவு: சென்னையின் முதல் உழைப்பாளர் தினக் கொண்டாட்டம்

    எழுதியவர் Nivetha P
    May 01, 2023
    11:34 am

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிலேயே முதன்முறையாக 1923ம் ஆண்டு சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சென்னையில் செங்கொடியை உயர்த்தி மே தினத்தினை கொண்டாட வழிவகுத்தார்.

    அதன் படி, தற்போது மே தினம் கொண்டாட துவங்கி 100 ஆண்டுகள் நிறைவுப்பெறுகிறது.

    1886ம் ஆண்டு மே மாதம் சிகாகோவில் சர்வதேச தொழிலாளர் தினமாக துவங்கப்பட்ட இது உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

    சிங்காரவேலு செட்டியார் துவங்கிய ஹிந்துஸ்தானின் தொழிலாளர் கிசான் கட்சி ஏற்பாடு செய்த தொழிலாளர் வர்க்கத்தின் சின்னமான செங்கோடி இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டது.

    சிங்காரவேலு செட்டியார் சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் உள்ள கடற்கரையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையிலும் 'மே தினம்' கொண்டாட்டங்களை நடத்தினார்.

    பின்னர் அவர் தலைமை வகித்து விழாவில் இந்த தினத்திற்கு விடுமுறை அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தினம்

    பல செயல் திட்டங்கள் உழைப்பாளர்களுக்காக சேர்க்கப்பட்ட தினம் 

    1925ம்ஆண்டு இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்ட நிலையில் 2ஆண்டுகளுக்கு முன்னர் இந்த ஹிந்துஸ்தான் தொழிலாளர் கிசான் கட்சி துவங்கப்பட்டது.

    மேலும் இந்த கட்சியின் செயல் திட்டத்தில் ஆண்களுக்கு 8மணி நேர வேலை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு 6 மணிநேர வேலை, இலவச மருத்துவப்பரிசோதனை, வீட்டின் மேம்பாடுப்பணிகள் மேற்கொள்ளல், 4 மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, 16வயது வரை கட்டாய கல்வி போன்ற பல திட்டங்கள் சேர்க்கப்பட்டது.

    அன்றையத்தினமே திருவான்மியூரில் நடந்த 2வது கூட்டத்தில் தொழிலாளர் கிசான் கட்சியின் செயலாளராக தேர்வுச்செய்யப்பட்டிருந்த எம்.பி.எஸ்.வேலாயுதம் தலைமையில் சுப்ரமணிய சிவா உள்ளிட்ட தலைவர்கள் உரையாடலுடன் இந்தியாவின் முதல் மே தினம் கொண்டாடப்பட்டது.

    இதனைதொடர்ந்து தற்போது ஒவ்வொரு ஆண்டும் இந்த உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    இந்தியா

    சமீபத்திய

    விஜய் 69: ஜனநாயகன் அப்டேட் வெளியாகியுள்ளது! நடிகர் விஜய்
    இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என அமெரிக்கா நம்பிக்கை இந்தியா
    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி

    சென்னை

    தமிழ் புத்தாண்டு மற்றும் வார இறுதி விடுமுறை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு  தமிழ்நாடு
    சென்னையில் தனியார் பராமரிக்கும் கழிவறை குறித்து புகாரளிக்க க்யூ.ஆர். குறியீடு  தமிழ்நாடு
    16 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் மீண்டும் சர்வதேச ஹாக்கி போட்டி ஹாக்கி போட்டி
    சென்னை கலாஷேத்ரா விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்

    இந்தியா

    பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு - 40 பெண்களுக்கும் ஒரே கணவரா? அதிர்ச்சியில் அதிகாரிகள் இந்தியா
    காலமான முன்னாள் பஞ்சாப் முதல்வரின் உடலுக்கு மரியாதை செலுத்தினார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிராக வழக்கு - உயர் நீதிமன்றத்தில் முறையீடு  ஆன்லைன் விளையாட்டு
    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 10 போலீசார் பலி மாநிலங்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025