NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து

    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து

    எழுதியவர் Nivetha P
    Feb 03, 2023
    07:01 pm

    செய்தி முன்னோட்டம்

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் புதிய தலைமை செயலக கட்டிடத்தை அம்மாநில அரசு அண்மையில் கட்டியுள்ளது.

    இந்த கட்டிடம் அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ்'ன் பிறந்த நாளான வரும் 17ம்தேதியன்று அவரது கையால் திறந்துவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அந்த கட்டிட பணிகள் முழுவதும் முடிந்த நிலையில், சில மர வேலைப்பாடுகள் மட்டும் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த கட்டிடத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து தலைமைசெயலக வாசலில் அடர்ந்த தீ எரிந்து கொண்டிருந்துள்ளது.

    உடனே இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அந்த தகவலின் பேரில் பல பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு சிலமணிநேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    அவசர நடவடிக்கைகளே காரணம்

    தலைமை செயலக கட்டிடத்தை திறந்து வைப்பதை ஒத்திவைக்க வேண்டும்-எம்.பி.பண்டி சஞ்சய் குமார்

    இதனைதொடர்ந்து எந்த தளத்தில் தீப்பிடித்து எரியத்துவங்கியது, தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது போன்ற விவரங்கள் ஏதும் இதுவரையில் வெளியாகவில்லை.

    முன்னதாக தீவிபத்து குறித்து செய்திகள் சேகரிக்க அங்குசென்ற செய்தியாளர்களிடம், 'இது ஒரு பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை' என்று தலைமைசெயலக பாதுகாப்பு பணியாளர்கள் கூறியுள்ளார்கள்.

    அதன் பின்னரே, அது தீவிபத்து என்று கண்டறியப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து, பா.ஜ.க., மாநில தலைவரும், எம்.பி.யுமான பண்டி சஞ்சய் குமார் இதுகுறித்து கூறுகையில், புதிய தலைமைசெயலகத்தில் தீவிபத்து ஏற்பட்டது வருத்தமளிக்கிறது.

    தனது பிறந்தநாளன்று இந்த கட்டிடத்தை திறக்கவேண்டும் என்று முதல்வர் கே.சந்திரசேகர ராவ் எடுத்த அவசர நடவடிக்கைகளே இதற்கு காரணம்.

    அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளன்று திறக்கப்படவேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    முதல் அமைச்சர்
    ஆந்திரா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா

    முதல் அமைச்சர்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025