NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து - 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் உயிரிழந்த பரிதாபம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து - 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் உயிரிழந்த பரிதாபம்
    கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து - 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் உயிரிழந்த பரிதாபம்

    கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்து - 5 ஆயிரம் கோழி குஞ்சுகள் உயிரிழந்த பரிதாபம்

    எழுதியவர் Nivetha P
    Jul 30, 2023
    05:07 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், ஈரோடு மாவட்டம் மேட்டுநாசுவம் பாளையம் அருகேயுள்ள பச்சபாலி ஆண்டிக்காடு தோட்டம் அமைந்துள்ளது.

    அங்கு முத்துசுவாமி(45) என்பவர் கோழி பண்ணை ஒன்றினை நடத்தி வந்துள்ளார்.

    இந்த கோழி பண்ணையினை அவர் தகர செட்டு அமைத்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

    அத்தகைய தகர செட்டில் ஆயிரக்கணக்கான கோழி குஞ்சுகளை வளர்த்து வந்த முத்துசுவாமி, இன்று(ஜூலை.,30) வழக்கம்போல் கோழிகளுக்கு உணவு வைத்து கொண்டிருந்துள்ளார்.

    அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்ட நிலையில், தகர செட் முழுவதும் தீ பற்றி எரிய துவங்கியுள்ளது.

    பண்ணையின் மேற்கூரை முழுவதுமே தகரத்தால் அமைக்கப்பட்டிருந்ததால் தீ பரவத்துவங்கிய சில மணி நேரத்திலேயே பண்ணை முழுவதும் எரிந்து நாசமானது.

    தீ 

    பண்ணை உரிமையாளர் வேதனை 

    இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயினை அணைத்தனர் என்றும் கூறப்படுகிறது.

    இருப்பினும், அதற்குள் பண்ணையில் இருந்த 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளது என்று தகவல் தெரிவிக்கிறது.

    இது குறித்து பண்ணை உரிமையாளர் முத்துசாமி கூறுகையில், கிட்டத்தட்ட ரூ.18 லட்சம் மதிப்புள்ள பண்ணைக்கான செட்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள கோழிக்குஞ்சுகள் என மொத்தம் ரூ.23 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரோடு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    ஈரோடு

    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பார்வையாளர்கள் நியமனம் தேர்தல்
    ஈரோடு இடைதேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டி - ஈபிஎஸ் அறிவிப்பு எடப்பாடி கே பழனிசாமி
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற அதீத எதிர்பார்ப்பு ஓ.பன்னீர்செல்வம்

    தமிழ்நாடு

    "துணிச்சலுடன் விசாரணையை எதிர்கொள்ளுங்கள்": அமைச்சர் பொன்முடியிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு செய்தி
    அடுத்த 7 நாட்களுக்கான மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  புதுச்சேரி
    மகளிர் உரிமை தொகை திட்டம் - 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ள விண்ணப்பப்பதிவு முகாம்கள்  சென்னை
    நிர்ணயம் செய்த விலையினை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் - டாஸ்மாக் நிர்வாகம்  டாஸ்மாக்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025