NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு
    பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு pc: தி ஹிந்து

    தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு

    எழுதியவர் Venkatalakshmi V
    May 13, 2025
    07:46 am

    செய்தி முன்னோட்டம்

    தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் இன்று (மே 13) கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

    காலை 11 மணிக்குள் தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளதாகவும், தண்டனை விவரங்கள் நண்பகல் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கொடூரம், கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது.

    கல்லூரி மாணவிகள் மற்றும் பல பெண்கள் மோசடி மூலம் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொடுமை செய்யப்பட்டதுடன், அவற்றை வீடியோவாக பதிவு செய்து மிரட்டல்கள் மேற்கொள்ளப்பட்டன.

    இந்த வீடியோக்கள் வெளிவந்ததுடன், சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #NewsUpdate | காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் தீர்ப்பும், தண்டனை விவரங்கள் பகலில் அறிவிக்கப்படும் என எதிர்பார்ப்பு #SunNews | #PollachiCase https://t.co/MJRpUjnCdM

    — Sun News (@sunnewstamil) May 13, 2025

    வழக்கு

    CBI விசாரணையை மேற்கொண்டது, 9 பேர் கைது

    இந்த வழக்கினை CBI கையில் எடுத்து விசாரிக்க தொடங்கியது.

    அதன் தொடர்ச்சியாக சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்த்குமார், மணிவண்ணன், பாபு, ஹெரன்பால், அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களுக்கு எதிராக கோவை மகளிர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    வழக்கு விசாரணை, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனியறையில் 'இன்கேமரா' முறையில் நடை பெற்றது.

    சாட்சி விசாரணை மற்றும் இருதரப்பின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில், மஹிளா கோர்ட் நீதிபதி நந்தினிதேவி இன்று தீர்ப்பு வழங்குகிறார்.

    தண்டனை பெறவுள்ள அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று கோவை நீதிமன்றத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். இதற்காக நீதிமன்ற வளாகம் முழுவதும் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #Watch | தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படுவதை ஒட்டி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.#SunNews | #PollachiCase |… https://t.co/MJRpUjoa3k pic.twitter.com/MhGnc5gvw7

    — Sun News (@sunnewstamil) May 13, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொள்ளாச்சி
    பாலியல் வன்கொடுமை
    பாலியல் தொல்லை
    கோவை

    சமீபத்திய

    தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாகிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் இன்று தீர்ப்பு பொள்ளாச்சி
    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ

    பொள்ளாச்சி

    சென்னை, மதுரை, பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா: வரும் ஜனவரி 10-ஆம் தேதி துவக்கம் சுற்றுலாத்துறை
    மே 13, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: கோவை மகளிர் நீதிமன்றம் அறிவிப்பு பாலியல் வன்கொடுமை

    பாலியல் வன்கொடுமை

    கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்படலாம் கர்நாடகா
    ஆண் கட்சி ஊழியரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் சகோதரர் கைது கர்நாடகா
    தாலிபான் மீது ஆப்கானிஸ்தான் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு ஆப்கானிஸ்தான்
    நடைமுறைக்கு வந்துள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் பற்றி ஒரு பார்வை சட்டம்

    பாலியல் தொல்லை

    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்

    கோவை

    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    மனைவிக்கு ஜீவனாம்சமாக 20 மூட்டைகளில் ₹80,000 மதிப்பிலான நாணயங்கள்; நீதிமன்றத்தை திகைக்கவைத்த கணவர் ட்ரெண்டிங் வீடியோ
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 23) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 24) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025