NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை(ஜன.,31) துவக்கம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம்

    எழுதியவர் Nivetha P
    Jan 30, 2023
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. கடந்த 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால் தேர்தல் ஆணையம் அத்தொகுதிக்கான இடைத்தேர்தலை பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்போவதாக கடந்த ஜனவரி 18ம் தேதி அறிவித்தது.

    இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (ஜன.31.,) துவங்கவுள்ளது என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும், மனுக்கள் மீதான பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதி என்றும் கூறப்பட்டுள்ளது.

    மனுக்களை திரும்பப்பெற பிப்ரவரி 10ம் தேதியே கடைசி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சி மைய அலுவலகத்தின் கீழ் தளத்தில், தேர்தல் பிரிவு அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    டெபாசிட் தொகை

    வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கட்டுப்பாடுகள் அறிவிப்பு

    மேலும் வேட்புமனுக்களை காலை 11மணி முதல் 3மணி வரை தாக்கல் செய்யலாம்.

    வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளருடன் 4பேர் மட்டுமே வருவதற்கு அனுமதி என்றும், வேட்பாளருடன் மூன்று கார்கள் மட்டுமே வரவேண்டும் என்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    மனுதாக்கல் செய்யும் பொது வேட்பாளர்கள் டெபாசிட் தொகையாக ரூ.10ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் ரூ.5ஆயிரமும் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடவேண்டியவை.

    இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணிகட்சி சார்பில் இறந்த திருமகன் ஈ.வெ.ரா.,வின் தந்தையும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.,இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    இவர் தனது வேட்புமனு தாக்கலை பிப்ரவரி 3ம்தேதி தாக்கல் செய்யப்போவதாக முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் ஈ.பி.எஸ். மற்றும் ஓபிஎஸ் சார்பில் தனித்தனியே தேர்தல் பணிக்குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரோடு
    தேர்தல்

    சமீபத்திய

    கர்னல் குரேஷியை 'பயங்கரவாத சகோதரி' என்று அழைத்த பாஜக அமைச்சரை கண்டித்த உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    அலெக்சா, ஹார்ட்வேர் துறைகளில் பணி நீக்கம் செய்யும் அமேசான் அமேசான்
    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025