NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் 
    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல்

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் 

    எழுதியவர் Nivetha P
    May 24, 2023
    05:49 pm

    செய்தி முன்னோட்டம்

    1947ம்ஆண்டு ஆகஸ்ட் 14ம்தேதி இந்தியா சுதந்திரம் பெறுவதற்கான சட்டரீதியான பணிகள் நடந்து கொண்டிருந்துள்ளது.

    அப்போது சுதந்திரத்தினை எவ்வித நடைமுறையில் பெறுவது என்னும் கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது.

    தமிழகத்தில் மன்னர் ஆட்சிக்காலத்தில் மாற்றம் ஏற்படும் நிலையில், ராஜகுரு பதவியில் இருப்பவர் செங்கோலினை புதிய மன்னருக்கு வழங்குவார்.

    அந்த நடைமுறையினையே நாமும் பின்பற்றலாம் என்று ராஜாஜி கூறியுள்ளார்,

    இதற்கு நேருவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

    அதன்படி சைவச்சின்னம் பொறிக்கப்பட்ட தங்க செங்கோலினை அப்போதைய உம்மிடி பங்காரு நகை கடையில் வாங்கிக்கொண்டு ஆதீன அடியார்கள் டெல்லி சென்றுள்ளார்கள் என்று வரலாறு கூறுகிறது.

    இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 15ம்தேதி சுதந்திரம் கிடைத்தபோது மவுண்ட் பேட்டனிடம் இருந்து இந்த செங்கோலினை திருவாவுடுத்துறை ஆதின கட்டளை தம்பிரான் சுவாமிகள் பெற்றுக்கொண்டார்.

    செங்கோல் 

    புனித நீர் தெளிக்கப்பட்டு நேருவிடம் கொடுக்கப்பட்ட செங்கோல் 

    இதனை தொடர்ந்து அந்த செங்கோல் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டு, ஆதீன ஓதுவார் திருப்பதிகம் பாடி முடித்த பின்னர், நேருவிடம் வழங்கியுள்ளார்கள்.

    அந்த செங்கோலானது அலகாபாத் நகரில் உள்ள நேருவின் இல்லத்தில் நினைவு பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வரும் 28ம் தேதி புதிய பாராளுமன்றத்தினை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளதையடுத்து, அந்த கட்டிடத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்த செங்கோல் வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

    இது குறித்து அவர், வரலாற்றில் இந்த செங்கோலுக்கு பெருமளவில் பங்கு உள்ளது.

    இதற்கு பின்னால் ஓர் பெரிய பாரம்பரியமும் புதைந்துள்ளது.

    இதன் சிறப்பினை எடுத்துரைக்கும் வகையில் புதிய பாராளுமன்றத்தில் இந்த செங்கோல் வைக்கப்படவுள்ளது என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    டெல்லி
    அமித்ஷா

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    இந்தியா

    இன்றைய தங்க விலை நிலவரம்! தங்கம் வெள்ளி விலை
    பிஜி நாட்டின் உயரிய கவுரவ விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது  நரேந்திர மோடி
    'போதைப்பொருள் சோதனைக்கு தயார், ஆனால் ஒரு நிபந்தனை' : மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் இந்திய அணி
    ரூ.15,000 கோடி மதிப்புடைய BSNL ஒப்பந்தத்தை கைப்பற்றிய டாடா குழுமம்! டாடா

    டெல்லி

    புது டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து 400 குழந்தைகள் மீட்பு இந்தியா
    மாசடைந்த யமுனை நதி: டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு இந்தியா
    ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் இந்தியா
    டெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி இந்தியா

    அமித்ஷா

    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா! மோடி
    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம் இந்தியா
    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025