ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல்
தமிழகத்தில் இயங்கும் அரசு பள்ளிகளில் பயிலும் 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டுமெனில் ஆசிரியர் தகுதி தேர்வு 2ம்தாளில் தேர்ச்சி பெறவேண்டும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கான தேர்வும் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட நிலையில், தற்போது அதன் முடிவுகள் நேற்று(மார்ச்.,28) வெளியானது. அதன்படி இந்த ஆசிரியர் தகுதி தேர்வினை எழுத 4,01,986 பேர் பதிவு செய்த நிலையில், 2.54 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. மீதம் 1.5 லட்சம் பேர் தேர்வு எழுதவே வரவில்லை. இந்நிலையில் தற்போது தேர்வெழுதிய 2.50 லட்சம் பேரில் 20 ஆயிரத்திற்கும் குறைவான பட்டதாரி ஆசிரியர்களே தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.