NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு இடைத்தேர்தல் - முதல்வரை சந்தித்து ஆதரவு கோரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு இடைத்தேர்தல் - முதல்வரை சந்தித்து ஆதரவு கோரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
    முதல்வரை சந்தித்து ஆதரவு கோரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    ஈரோடு இடைத்தேர்தல் - முதல்வரை சந்தித்து ஆதரவு கோரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023
    11:34 am

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு இடைதேர்தல் வரும் பிப்ரவரி 27ம்தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இதில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பங்கேற்கிறார் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அவர் தனக்கு ஆதரவு தருமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று(ஜன 23) சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசி வாழ்த்தினை பெற்றுள்ளார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியஅவர், இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி தெரிவித்ததாகவும், பிரசாரத்திற்கு வரவேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

    தொடர்ந்து முதல்வர் பிரசாரத்திற்கு வருவதாக ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

    மேலும், ஏற்கனவே தொகுதியில் திமுக காங்கிரஸ் கட்சியினர் இணைந்து பிரசாரத்தை துவங்கிவிட்டதாக கூறியஅவர், முதல்வர் தங்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் என்றும்,

    தங்கள் வெற்றி நிச்சயம் என்றும் நம்பிக்கையாக பேசியது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலுக்கான கூட்டணி

    ம.நீ.ம. தலைவர் கமலஹாசன் உள்ளிட்ட பல கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரிய இளங்கோவன்

    தமிழக முதல்வரை சந்தித்து பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மக்கள் நீதிமய்ய தலைவர் கமலஹாசன் அவர்களையும் சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் கட்சி அலுவலகத்தில் அவரை சந்தித்து பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து கட்சி செயற்குழு கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து தெரிவிப்பதாக கூறியுள்ளார் என்று கூறினார்.

    மேலும், அவர் ஆதரவு தெரிவிக்கும் பட்சத்தில், தேர்தலுக்கான கூட்டணியாக இது அமையும் என்றும் அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட், மதிமுக, தமிழக வாழ்வுரிமை போன்ற கட்சிகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினார் என்பது குறிப்பிடவேண்டியவை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தேர்தல்
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தேர்தல்

    குஜராத் தேர்தல் முடிவுகள்: வெற்றி வாகை சூடிய பாஜக! குஜராத்
    இமாச்சல் முதல்வர் யார்? - இன்று முதல்வர் வேட்பாளர் தேர்வு இந்தியா
    குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் குஜராத்
    புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்க 'ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்' - தேர்தல் ஆணையம் இந்தியா

    முதல் அமைச்சர்

    'சலூன்' ரயில் பெட்டியில் தென்காசி சென்றார் முதல்வர் ஸ்டாலின்
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! இந்தியா
    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி பயணம் - ரூ.3000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு
    சென்னையில் இல்லம் தேடி பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க நடவடிக்கை - அமைச்சர் உறுதி சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025