NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
    அதிமுக பிரச்சனை: உச்ச நீதிமன்றத்தில் விறுவிறு விசாரணை

    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

    எழுதியவர் Sindhuja SM
    Jan 04, 2023
    06:37 pm

    செய்தி முன்னோட்டம்

    அதிமுக இடைக்கால பொது செயலாளர் பிரச்சனையை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.

    அதிமுக இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    இதை எதிர்த்த ஒபிஎஸ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இதன் தீர்ப்பு ஒபிஎஸ் தரப்பினருக்கு சாதகமாக வரவில்லை.

    இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர்.

    இதை எதிர்த்த ஈபிஎஸ் தரப்பினர், கேவியட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

    இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.

    இதை விசாரித்த நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு, இந்த வாரத்தோடு இந்த வழக்கை முடித்தாக வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை நாளைக்கு(ஜன:5) தள்ளி வைத்துள்ளனர்.

    அதிமுக

    விசாரணையில் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி பதில்கள்:

    அதிமுக இடைக்கால பொது செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதா?

    ஈபிஎஸ் தரப்பு: பொதுகுழு உறுப்பினர்களால் பெரும்பான்மையில் ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    ஒபிஎஸ் தரப்பின் வாதம்: அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொது செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அதனால் இது செல்லாது.

    ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றதா?

    ஓபிஎஸ் தரப்பு: வேறு யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யாததால் ஒருமித்த கருத்துடன் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர்.

    விளக்கம் கேட்காமல் ஓபிஎஸை நீக்கியது ஏன்?

    ஈபிஎஸ் தரப்பு: அவர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதால் நீக்கப்பட்டார்.

    நீதிபதிகள் பதில்: அவர் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பது நீதிமன்றத்திற்கு அவசியம் இல்லாதது. இந்த வாரத்திற்குள் இந்த வழக்கை நிறைவு செய்ய விரும்புகிறோம். என்று கூறி வழக்கை நாளைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அதிமுக
    எடப்பாடி கே பழனிசாமி

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    அதிமுக

    எம்.ஜி.ஆரின் 35வது நினைவுத்தினம் இன்று அனுசரிப்பு-நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி தமிழ்நாடு
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? தமிழக அரசு
    2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்-பொதுமக்களுக்கு இலவச வேட்டி,சேலை வழங்க தமிழக அரசு முடிவு பொங்கல் பரிசு

    எடப்பாடி கே பழனிசாமி

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025