NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
    இந்தியா

    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
    எழுதியவர் Sindhuja SM
    Jan 04, 2023, 06:37 pm 0 நிமிட வாசிப்பு
    ஈபிஎஸ்-ஒபிஎஸ் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
    அதிமுக பிரச்சனை: உச்ச நீதிமன்றத்தில் விறுவிறு விசாரணை

    அதிமுக இடைக்கால பொது செயலாளர் பிரச்சனையை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. அதிமுக இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்த ஒபிஎஸ் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இதன் தீர்ப்பு ஒபிஎஸ் தரப்பினருக்கு சாதகமாக வரவில்லை. இதனையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல் முறையீடு செய்தனர். இதை எதிர்த்த ஈபிஎஸ் தரப்பினர், கேவியட் மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் அமர்வு, இந்த வாரத்தோடு இந்த வழக்கை முடித்தாக வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை நாளைக்கு(ஜன:5) தள்ளி வைத்துள்ளனர்.

    விசாரணையில் கேட்கப்பட்ட முக்கிய கேள்வி பதில்கள்:

    அதிமுக இடைக்கால பொது செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதா? ஈபிஎஸ் தரப்பு: பொதுகுழு உறுப்பினர்களால் பெரும்பான்மையில் ஈபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒபிஎஸ் தரப்பின் வாதம்: அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொது செயலாளரை தேர்ந்தெடுக்க முடியும். அதனால் இது செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றதா? ஓபிஎஸ் தரப்பு: வேறு யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யாததால் ஒருமித்த கருத்துடன் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். விளக்கம் கேட்காமல் ஓபிஎஸை நீக்கியது ஏன்? ஈபிஎஸ் தரப்பு: அவர் திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதால் நீக்கப்பட்டார். நீதிபதிகள் பதில்: அவர் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பது நீதிமன்றத்திற்கு அவசியம் இல்லாதது. இந்த வாரத்திற்குள் இந்த வழக்கை நிறைவு செய்ய விரும்புகிறோம். என்று கூறி வழக்கை நாளைக்கு தள்ளி வைத்துள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக

    சமீபத்திய

    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - மனித உரிமை மீறல் ஆணையத்தில் புகார் தமிழ்நாடு
    "நாட்டு நாட்டு" முதல் புஷ்பா வரை: கோலாகலமாக நடந்த ஐபிஎல் 2023 தொடக்க விழா ஐபிஎல் 2023
    மாட்ரிட் ஸ்பெயின் மாஸ்டர்ஸ் காலிறுதியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி இந்திய அணி
    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு மாநில அரசு

    எடப்பாடி கே பழனிசாமி

    அதிமுக பொதுக்குழு குறித்த வழக்கின் தீர்ப்பு வெளியானது - பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் அதிமுக
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக
    டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது - அமைச்சர் பதில் சென்னை
    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் பட்ஜெட் 2023

    அதிமுக

    ஓ.பன்னீர் செல்வம் தனிக்கட்சி துவங்குகிறாரா? என்ன செய்ய போகிறார்? ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுக்குழு தீர்ப்பு - ஓபிஎஸ் மேல்முறையீடு ஓ.பன்னீர் செல்வம்
    அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் குறித்த வழக்கின் தீர்ப்பு ஈபிஎஸ்'க்கு சாதகமாக அமையும் என பேச்சு எடப்பாடி கே பழனிசாமி
    அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு - நாளை மறுநாள் விசாரணை ஓ.பன்னீர் செல்வம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023