NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை 
    திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை 
    இந்தியா

    திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை 

    எழுதியவர் Nivetha P
    April 13, 2023 | 07:24 pm 1 நிமிட வாசிப்பு
    திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை 
    திருமூர்த்தி மலை பகுதிகளில் யானை கூட்டம் - விவசாயிகள் கவலை

    தமிழ்நாடு-உடுமலை மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குட்டிகளுடன் கூடிய யானைக்கூட்டம் நீர், உணவினை தேடி மலையடிவார கிரமப்பகுதிகளுக்குள் சென்று சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. திருமூர்த்திமலை, கன்னிமார் ஓடை வனப்பகுதி வழியாக திருமூர்த்தி நகருக்குள் நேற்று(ஏப்ரல்.,12) அதிகாலை நுழைந்துள்ளது. இந்த யானைக்கூட்டம் வன எல்லையில் அமைந்துள்ள விவசாய நிலத்தில் 250மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலி, 50க்கும் மேற்பட்ட வேலி கற்களை உடைத்துக்கொண்டு சென்று தென்னை மரங்களின் குருத்துக்களை உண்டு சேதப்படுத்தியுள்ளது. மேலும் விவசாய நிலத்தில் புகுந்து பயிர்கள், குழாய்கள், போர் வெல்கள் போன்ற நீர்ப்பாசன கட்டமைப்புகளையும் சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் வருத்தம் 

    இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு அந்த யானைக்கூட்டத்தினை வனப்பகுதிக்குள் விரட்ட தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதற்கிடையே அப்பகுதி விவசாயிகள் பேசுகையில், பெரிய தந்தங்கள் கொண்ட ஆண் யானை, பிறந்து சில மாதங்களே ஆன குட்டியுடன் கூடிய பெண் யானை கூட்டம் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. குட்டியுடன் உள்ளதால் அது பெரிதாகும் வரை இங்கிருந்து அதனை விரட்டுவது கடினம். வெகு நாட்களுக்கு பிறகு திருமூர்த்திமலை கோயில், நீச்சல் குளம், ஆய்வு மாளிகை பகுதிகளில் யானை கூட்டம் காணப்படுகிறது. இவற்றால் விவசாய பயிர்கள், கட்டமைப்புகள் சேதமடைவதோடு, உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    இந்தியா

    தமிழ்நாடு

    லலித் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு  இந்தியா
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  சேலம்
    ஏப்ரல் 14 , தமிழ் புத்தாண்டாக எதற்காக கொண்டாடுகிறோம் தெரியுமா? உலகம்
    தமிழ் மொழி மீது இந்தி மொழியினை திணிக்க முடியாது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆளுநர் மாளிகை

    இந்தியா

    இந்தியாவில் அதிக ஆண்கள் மனைவிகளால் கொல்லப்படுகின்றனர்: ஆய்வில் தகவல்  குற்றவியல் நிகழ்வு
    இந்தியாவின் வெப்பநிலை விரைவில் உயரும்: வானிலை ஆய்வு மையம்  வானிலை அறிக்கை
    சிறைத்தண்டனைக்கு முறையீடு செய்ய உள்ளோம் - தன்னிலை விளக்கம் அளித்த லிங்குசாமி! கோலிவுட்
    வீடியோ: திருடியதாக குற்றம் சாட்டி ஊழியரை அடித்தே கொன்ற கம்பெனி  உத்தரப்பிரதேசம்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023