NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!
    பென்ஷன் திட்டம் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டதில் இருந்து சிரமப்படும் முதியவர்கள்(படம்: India Times)

    பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!

    எழுதியவர் Sindhuja SM
    Dec 21, 2022
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    காஷ்மீர் பந்திபோராவில் உள்ள மலங்கம் பகுதியைச் சேர்ந்த சோனாவுல்லா பட் என்ற முதியவர் நேற்று காலை தாலுகா சமூக நல அலுவலகத்தில், ஓய்வூதிய ஆவணங்களை சமர்பிப்பதற்காக காத்திருந்தபோது உயிரிழந்துள்ளார்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் ஓய்வூதியத் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறி இருக்கின்றனர்.

    இதனையடுத்து, அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க சென்ற 62 வயது சோனாவுல்லா பட் அதற்காக காத்திருக்கும் போதே உயிரிழந்துள்ளார்.

    இவர் திடீர் என்று இறந்துவிட்டதால் எதனால் இறந்தார் என்பது சரியாக தெரியவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

    பென்ஷன்

    "மனிதாபிமானத்தோடு நடக்க வேண்டும்!"

    தனது பழைய பென்ஷன் தகுதியை சரிபார்ப்பதற்கு அதிகாரிகள் அழைத்ததால் இந்த முதியவர் அங்கு சென்றிருக்கிறார்.

    இவர் பென்ஷனுக்கு என்ன ஆகுமோ என்ற பதட்டத்தில் நேற்று அலுவலக நேரம் ஆரம்பிக்கும் முன்பே அங்கு சென்று காந்திருந்ததாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.

    மேலும், காஷ்மீர் குளிரில் பல முதியவர்கள் இதற்காக இப்படி காத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

    அதிகாரிகளுக்கு காத்திருக்கும் போது இவர் உயிரிழந்ததால் இந்த விஷயத்தை காஷ்மீர் அரசியல்வாதிகள் விமர்சித்து வருகின்றனர்.

    பென்ஷன் திட்டம் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டதில் இருந்து வயோதிகர்கள் பலர் ஆன்லைனுக்கு மாற்றுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க மிகவும் சிரமப்படுகின்றனர்.

    இதைக் கண்டித்த அங்குள்ள அரசியல் கட்சிகள் "மனிதாபிமானத்தோடு நடக்க வேண்டும்! முதியவர்களுக்கு ஏற்ற ஒரு முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும்!" என்று கூறியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    இந்தியா

    தாத்தாவின் நினைவுகளைத் தேடி குன்னூர் வந்த உலக வங்கி நிபுணர்! உலக செய்திகள்
    தென் இந்தியாவில் அதிகரித்திருக்கும் விவசாயிகள் தற்கொலை! தமிழ்நாடு
    இமாச்சல் முதல்வர் பதவியேற்பு: ட்விட்டரில் குவியும் வாழ்த்து! ஸ்டாலின்
    1000 விளக்குகளால் உருவான ஸ்ரீரங்கம் கோயிலின் ராஜகோபுரம் தமிழ்நாடு

    வைரல் செய்தி

    நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்! இந்தியா
    1986 & 2022: 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நிஜமாகும் வரலாற்று சாதனை கமல்ஹாசன்
    விவாகரத்து பெறுவதற்கு காரணம் தேடிய கணவர்-கர்ப்பிணி மனைவிக்கு எச்.ஐ.வி. ரத்தத்தை செலுத்திய கொடூரம் இந்தியா
    கர்நாடகாவில் 15 வயது அண்ணன் துப்பாக்கியால் சுட்டு 7 வயது சகோதரன் பலி - அஜாக்கிரதையால் நிகழ்ந்த மரணம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025