NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!
    இந்தியா

    பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!

    பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!
    எழுதியவர் Sindhuja SM
    Dec 21, 2022, 06:16 pm 0 நிமிட வாசிப்பு
    பென்ஷன் வாங்குவதற்கு வரிசையில் நின்ற முதியவர் பலி!
    பென்ஷன் திட்டம் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டதில் இருந்து சிரமப்படும் முதியவர்கள்(படம்: India Times)

    காஷ்மீர் பந்திபோராவில் உள்ள மலங்கம் பகுதியைச் சேர்ந்த சோனாவுல்லா பட் என்ற முதியவர் நேற்று காலை தாலுகா சமூக நல அலுவலகத்தில், ஓய்வூதிய ஆவணங்களை சமர்பிப்பதற்காக காத்திருந்தபோது உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில் ஓய்வூதியத் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறி இருக்கின்றனர். இதனையடுத்து, அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க சென்ற 62 வயது சோனாவுல்லா பட் அதற்காக காத்திருக்கும் போதே உயிரிழந்துள்ளார். இவர் திடீர் என்று இறந்துவிட்டதால் எதனால் இறந்தார் என்பது சரியாக தெரியவில்லை என்கின்றனர் அதிகாரிகள்.

    "மனிதாபிமானத்தோடு நடக்க வேண்டும்!"

    தனது பழைய பென்ஷன் தகுதியை சரிபார்ப்பதற்கு அதிகாரிகள் அழைத்ததால் இந்த முதியவர் அங்கு சென்றிருக்கிறார். இவர் பென்ஷனுக்கு என்ன ஆகுமோ என்ற பதட்டத்தில் நேற்று அலுவலக நேரம் ஆரம்பிக்கும் முன்பே அங்கு சென்று காந்திருந்ததாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. மேலும், காஷ்மீர் குளிரில் பல முதியவர்கள் இதற்காக இப்படி காத்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதிகாரிகளுக்கு காத்திருக்கும் போது இவர் உயிரிழந்ததால் இந்த விஷயத்தை காஷ்மீர் அரசியல்வாதிகள் விமர்சித்து வருகின்றனர். பென்ஷன் திட்டம் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டதில் இருந்து வயோதிகர்கள் பலர் ஆன்லைனுக்கு மாற்றுவதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க மிகவும் சிரமப்படுகின்றனர். இதைக் கண்டித்த அங்குள்ள அரசியல் கட்சிகள் "மனிதாபிமானத்தோடு நடக்க வேண்டும்! முதியவர்களுக்கு ஏற்ற ஒரு முறையை நிர்வாகம் பின்பற்ற வேண்டும்!" என்று கூறியுள்ளனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    வைரல் செய்தி

    சமீபத்திய

    திரிபுராவில் ரூ.1 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் திரிபுரா
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் தமிழ்நாடு
    இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகும் 'மியூசிக் ஸ்கூல்'; பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு இளையராஜா
    இந்தியாவில் 2 ஆயிரத்தை தாண்டிய கொரோனா: ஒரே நாளில் 2,151 கொரோனா பாதிப்பு இந்தியா

    இந்தியா

    உக்ரைனில் இருந்து திரும்பி இருக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தனி தேர்வு உக்ரைன்
    18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து: அரசு அதிரடி நடவடிக்கை உஸ்பெகிஸ்தான்
    கடந்த 5 ஆண்டுகளில் IIT, IIM, NITஐ சேர்ந்த 61 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர் நாடாளுமன்றம்
    இந்தியாவில் ஏப்ரல் மாதம் முதல் அத்தியாவசிய மருந்துகளின் விலை 12% வரை உயருகிறது இந்தியா

    வைரல் செய்தி

    சமந்தாவின் மாஜி கணவர், பொன்னியின் செல்வன் நடிகையுடன் காதலா? வைரலாகும் புகைப்படங்கள் சமந்தா ரூத் பிரபு
    மத உணர்வுகளை புண்படுத்திய குற்றத்துக்காக, நடிகை டாப்ஸி மீது புகார் கோலிவுட்
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் கொள்ளை விவகாரம்: ஈஸ்வரி, வெங்கடேசனை காவலில் எடுத்து விசாரிக்க திட்டம் தமிழக காவல்துறை
    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023