NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அருந்ததியர்கள் குறித்து சீமான் கூறிய கருத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    அருந்ததியர்கள் குறித்து சீமான் கூறிய கருத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
    பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடக்கிறது.

    அருந்ததியர்கள் குறித்து சீமான் கூறிய கருத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 23, 2023
    10:17 am

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான சமீபத்திய பிரசாரத்தின் போது, ​​அருந்ததியர் சமூகம் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய கருத்துக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்தக் கருத்துக்கு அருந்ததியர் அமைப்பினர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    கடிதம் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்குமாறு மேனகாவிடம் தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது, தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    பிப்ரவரி 27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடக்கிறது.

    தமிழ்நாடு

    சீமான் மீது வழக்கு பதிவு

    இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் என்பவர் போட்டி இடுகிறார்.

    இந்நிலையில், ஈரோடு தேர்தல் பிரச்சாரத்தின் போது சீமான் பேசிய கருத்துக்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

    விஜயநகர மன்னர்கள் தமிழ்நாட்டைக் கைப்பற்றியபோது, ​​புதிய ஆட்சியாளர்களுக்கு வேலை செய்ய துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் சமூகத்தினர் மறுத்துவிட்டனர். "அப்போதுதான் ஆந்திராவில் இருந்த அருந்ததியர் சமூகத்தை இந்தப் பகுதியின் துப்புரவுத் தொழிலுக்கு அழைத்து வந்தார்கள்." என்று சில நாட்களுக்கு முன்பு தனது பிரச்சார உரையில் சீமான் கூறினார்.

    அவர் இதை கூறியதில் இருந்து பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், சீமான் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரோடு
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம் மாவட்ட செய்திகள்

    தமிழ்நாடு

    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை மதுரை
    ஒரு மில்லியன் டாலர் நிதியை திரட்டும் வீட்டு உணவு சந்தையான குக்ர் நிறுவனம் சென்னை
    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவை
    மருத்துவ கழிவுகளை கண்ட இடத்தில் வீசுபவர்கள் மீது குண்டர் சட்டம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025