Page Loader
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து 99 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு

எழுதியவர் Sindhuja SM
Jan 31, 2023
03:07 pm

செய்தி முன்னோட்டம்

அந்தமான் கடலில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று(ஜன 31) 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பொருள் சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த தகவல்கள் இதுவரை இல்லை. நிலநடுக்கம் நள்ளிரவு 12:15 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) ட்வீட் செய்துள்ளது. இது 77 கிமீ ஆழம் கொண்டது என்று NCS தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் அட்சரேகை 12.60 மற்றும் தீர்க்கரேகை 93.42 ஆக இருந்தது. யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்படி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து 99 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்தமான்

சமீபத்தில் இந்தியாவில் பதிவான நிலநடுக்கங்கள்

ஜனவரி-24அன்று, டெல்லியின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 15 வினாடிகளுக்கு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தலைநகரின் மக்கள் தெரிவித்திருந்தனர். அந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் அமைந்திருந்தது. நேற்று குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஜூலை 2022 இல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 24 மணி நேரத்திற்குள் 22 நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தன. இவை 3.8 முதல் 5.0 வரையிலான ரிக்டர் அளவுகளை கொண்டிருந்தன.