NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு
    அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து 99 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9ஆக பதிவு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 31, 2023
    03:07 pm

    செய்தி முன்னோட்டம்

    அந்தமான் கடலில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று(ஜன 31) 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    பொருள் சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த தகவல்கள் இதுவரை இல்லை.

    நிலநடுக்கம் நள்ளிரவு 12:15 மணியளவில் ஏற்பட்டதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) ட்வீட் செய்துள்ளது. இது 77 கிமீ ஆழம் கொண்டது என்று NCS தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கத்தின் மையம் அட்சரேகை 12.60 மற்றும் தீர்க்கரேகை 93.42 ஆக இருந்தது.

    யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வின்படி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து 99 கிமீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அந்தமான்

    சமீபத்தில் இந்தியாவில் பதிவான நிலநடுக்கங்கள்

    ஜனவரி-24அன்று, டெல்லியின் சில பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 15 வினாடிகளுக்கு நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தலைநகரின் மக்கள் தெரிவித்திருந்தனர்.

    அந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளத்தில் அமைந்திருந்தது.

    நேற்று குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    ஜூலை 2022 இல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 24 மணி நேரத்திற்குள் 22 நிலநடுக்கங்கள் பதிவாகி இருந்தன. இவை 3.8 முதல் 5.0 வரையிலான ரிக்டர் அளவுகளை கொண்டிருந்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    இணையத்தில் ட்ரெண்டாகும் துணிவு படத்தின் மேக்கிங் வீடியோ! துணிவு
    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் காவல்துறை
    பிரதமர் மோடியின் பிபிசி ஆவணப்படத்தால் ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் 4 பேர் கைது நரேந்திர மோடி
    பத்ம விருதுகள் 2023: இந்த ஆண்டு விருது வென்றவர்கள் பட்டியல் வெளியீடு பத்மஸ்ரீ விருது
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025