NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்
    இந்தியா

    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்

    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்
    எழுதியவர் Nivetha P
    Jan 13, 2023, 03:35 pm 1 நிமிட வாசிப்பு
    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்
    போகி பண்டிகையையொட்டி பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம் - தமிழக அரசு

    நமது பொங்கல் திருநாளுக்கு முந்தைய நாள் 'பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்பதன் அடிபடையில் இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையாக கொண்டாடியுள்ளனர். இதனால் காற்றுமாசுபடாமல், சுற்றுசூழலுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை, பழைய பொருட்கள் என்று பிளாஸ்டிக் பொருட்கள் செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், பழைய டயர், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை மக்கள் எரிக்கிறார்கள். இதனால் ஏற்படும் அடர்ந்த புகை காரணமாக விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. சென்னையிலும் இப்புகையால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதோடு, பல விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த நச்சு புகையால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவற்றாலும் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

    15 இடங்களில் 24 மணிநேரமும் காற்று தர அளவு ஆய்வு - 100 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

    இத்தகைய செயல்களை பொதுமக்கள் விழிப்புணர்வு இல்லாமல் செய்து வருவதால், விழிப்புணர்வு பிரச்சாரத்தை கடந்த 19ஆண்டுகளாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் மக்கள் மத்தியில் நடத்தி வருகிறது. இதன் விளைவாக கடந்த சில வருடங்களில் ரப்பர் டுயூப், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் எரிப்பது பெருமளவில் குறைந்துள்ளது. அதன்படி, இந்தாண்டும் பிரச்சாரம் நடத்த ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் சென்னையில் 8 முதல் 12ம் தேதி வரை சுமார் 100 மெட்ரிக் டன் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், டயர்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இன்றும் நாளையும் 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்திறனை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வுசெய்ய ஏற்பாடு செய்துள்ளது. இதனையடுத்து, காற்றின் தர அளவு வாரிய இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    காற்று மாசுபாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜானி பேர்ஸ்டோக்கு பதிலாக மேத்யூ ஷார்ட் சேர்ப்பு ஐபிஎல் 2023
    வேகமாக அதிகரிக்கும் கொரோனா: ICMR அதிரடி நடவடிக்கை கொரோனா
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்
    பஜாஜ் பல்சர் 220F Vs TVS அப்பாச்சி RTR 200 4V - சிறந்த பைக் எது? பைக் நிறுவனங்கள்

    காற்று மாசுபாடு

    டெல்லியில் குறைந்த பட்சவெப்பநிலை 1.4ஆக பதிவு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை குளிர்காலம்

    தமிழக அரசு

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்
    தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு தமிழ்நாடு
    தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023