NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம்
    இந்தியா

    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம்

    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம்
    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023, 07:43 pm 1 நிமிட வாசிப்பு
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-டெலிமெடிசன் திட்டம் துவக்கம்

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கத்திரிமலை என்னும் மலை கிராமத்தில் சாலைகள் இல்லை, மின்சாரம் வெகுசில வீடுகளிலேயே பார்க்க முடியும். இப்படிப்பட்ட கிராமத்தில் சிகிச்சை பெறவேண்டும் எனில், 40 கி.மீ., தொலைவில் உள்ள சுகாதார மையத்திற்கே செல்லவேண்டிய நிலை. இந்நிலையை மாற்ற ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அம்மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுன்னி மற்றும் அவரது குழுவினர் ஓர் திட்டத்தை ஆலோசித்துள்ளனர். அதன்படி கத்திரிமலையை வெளியுலகத்தோடு இணைக்கும் நோக்கத்தோடு அதிவேக 5 GHz வைஃபை இணையத்தை பயன்படுத்த முற்பட்ட ஓர் லட்சியத்திட்டமான புன்னகை திட்டத்தை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியது. வைஃபை இணையசேவை அமைக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பள்ளியின் கணினிதிரையில் ஒருநொடியில் மருத்துவரை அணுக முடிவதால், தற்போது அங்கு வசிக்கும் மக்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி எளிதாக கிடைக்கிறது.

    டெலிமெடிசின் திட்டம் மூலம் பயனடைந்த மலைவாசிகள்

    இந்த டெலிமெடிசின் திட்டம் குறித்து அங்குள்ள மலைவாசி ஒருவர் கூறுகையில், நாங்கள் கூறும் அறிகுறிகளைகேட்டு மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். அந்த மருந்துகளை நாங்கள் நகரத்திற்கு செல்லும்போது வாங்கிகொள்கிறோம் என்று தெரிவித்தார். இத்திட்டத்தை தொடங்க முதல் தடை தொலைபேசி மற்றும் சாலைகள் இல்லாதது. இதனையடுத்து அப்பகுதியில் ஒரு தகவல் தொடர்பு வலையமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பின்னரே, கிருஷ்ணனுன்னியும் அவரது குழுவினரும் வைஃபை குறித்து ஆலோசித்துள்ளார்கள். இதனையடுத்து சமூக கணிப்பொறி மையத்தின் குழு, நபார்டு வங்கியுடன் இணைந்து மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் உதவியுடன் ஒரு கோபுரத்தையும் தேவையான வன்பொருளையும் நிறுவினர். காடுகளிலிருந்து 40கி.மீ.,தொலைவில் உள்ள அந்தியூர் நகரத்தில் இருந்து இணையத்திற்கான தொழில்நுட்ப உதவி கிடைத்துள்ளது. இந்த வைஃபை சுற்றுவட்டாரத்தில் உள்ள 434மாணவர்களுக்கும் பயன்படுகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    மாவட்ட செய்திகள்
    ஈரோடு

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    மாவட்ட செய்திகள்

    கடலூரில் ஆன்லைனில் வாங்கிய பொருளை தீயிட்டு கொளுத்திய பரபரப்பு சம்பவம் கடலூர்
    திருவள்ளூரில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த கோயிலில் மகா கும்பாபிஷேகம் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவரை கொன்று புதைத்த நண்பர்கள் - திடுக்கிடும் தகவல் தமிழ்நாடு
    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி கோவை

    ஈரோடு

    ஈரோட்டில் தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் அழைத்துச்சென்ற மருத்துவர் வைரல் செய்தி
    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி தமிழ்நாடு
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு சென்னை
    ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023