NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம்
    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-டெலிமெடிசன் திட்டம் துவக்கம்

    ஈரோடு கத்திரிமலையை வெளியுலகத்துடன் இணைக்க 5GHz வைஃபை இணையம்-மாவட்ட நிர்வாகம் அறிமுகம்

    எழுதியவர் Nivetha P
    Jan 31, 2023
    07:43 pm

    செய்தி முன்னோட்டம்

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள கத்திரிமலை என்னும் மலை கிராமத்தில் சாலைகள் இல்லை, மின்சாரம் வெகுசில வீடுகளிலேயே பார்க்க முடியும்.

    இப்படிப்பட்ட கிராமத்தில் சிகிச்சை பெறவேண்டும் எனில், 40 கி.மீ., தொலைவில் உள்ள சுகாதார மையத்திற்கே செல்லவேண்டிய நிலை.

    இந்நிலையை மாற்ற ஒன்பது மாதங்களுக்கு முன்னர் அம்மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுன்னி மற்றும் அவரது குழுவினர் ஓர் திட்டத்தை ஆலோசித்துள்ளனர்.

    அதன்படி கத்திரிமலையை வெளியுலகத்தோடு இணைக்கும் நோக்கத்தோடு அதிவேக 5 GHz வைஃபை இணையத்தை பயன்படுத்த முற்பட்ட ஓர் லட்சியத்திட்டமான புன்னகை திட்டத்தை மாவட்ட நிர்வாகம் அறிமுகப்படுத்தியது.

    வைஃபை இணையசேவை அமைக்கப்பட்ட நிலையில் அங்குள்ள பள்ளியின் கணினிதிரையில் ஒருநொடியில் மருத்துவரை அணுக முடிவதால், தற்போது அங்கு வசிக்கும் மக்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி எளிதாக கிடைக்கிறது.

    434 மாணவ பயனாளர்கள்

    டெலிமெடிசின் திட்டம் மூலம் பயனடைந்த மலைவாசிகள்

    இந்த டெலிமெடிசின் திட்டம் குறித்து அங்குள்ள மலைவாசி ஒருவர் கூறுகையில், நாங்கள் கூறும் அறிகுறிகளைகேட்டு மருத்துவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். அந்த மருந்துகளை நாங்கள் நகரத்திற்கு செல்லும்போது வாங்கிகொள்கிறோம் என்று தெரிவித்தார்.

    இத்திட்டத்தை தொடங்க முதல் தடை தொலைபேசி மற்றும் சாலைகள் இல்லாதது.

    இதனையடுத்து அப்பகுதியில் ஒரு தகவல் தொடர்பு வலையமைப்பு உருவாக்கப்பட்டது.

    அதன் பின்னரே, கிருஷ்ணனுன்னியும் அவரது குழுவினரும் வைஃபை குறித்து ஆலோசித்துள்ளார்கள்.

    இதனையடுத்து சமூக கணிப்பொறி மையத்தின் குழு, நபார்டு வங்கியுடன் இணைந்து மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் உதவியுடன் ஒரு கோபுரத்தையும் தேவையான வன்பொருளையும் நிறுவினர்.

    காடுகளிலிருந்து 40கி.மீ.,தொலைவில் உள்ள அந்தியூர் நகரத்தில் இருந்து இணையத்திற்கான தொழில்நுட்ப உதவி கிடைத்துள்ளது.

    இந்த வைஃபை சுற்றுவட்டாரத்தில் உள்ள 434மாணவர்களுக்கும் பயன்படுகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஈரோடு
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஈரோடு

    ஈரோடு இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த கமலஹாசன் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிப்ரவரி 3ம் தேதி வேட்பு மனு தாக்கல் தேர்தல்
    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை துவக்கம் தேர்தல்

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025