NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம்
    திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம்

    திருப்பதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திவ்ய தரிசனம் மீண்டும் துவக்கம்

    எழுதியவர் Nivetha P
    Apr 01, 2023
    08:53 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆந்திர மாநிலம் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுள் பாதயாத்திரையாக மலையேறி சென்று ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

    அதற்கான ஏற்பாடாகாவே திவ்ய தரிசனம் என்னும் பெயரில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது.

    திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி, ஸ்ரீனிவாசா மங்காபுரம் அருகில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு ஆகிய நடைபாதை வழியாக பாதையாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு இடையில் சாமி தரிசனத்திற்கு உரிய டோக்கன்கள் வழங்கப்படும்.

    அதன்படி அலிப்பிரி நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு தினமும் பத்தாயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு தினமும் ஐந்தாயிரம் டோக்கன்களும் வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால் இந்த நடைமுறையானது கொரோனா காலத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

    திவ்ய தரிசன டோக்கன்கள்

    இன்று முதல் திவ்ய தரிசனம் துவங்கியது

    திருமலை திருப்பதியில் கொரோனா காலகட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.

    தினமும் லட்சக்கணக்கில் பக்தர்களுக்கு தரிசனம் வழங்கும் TTD கொரோனா காலத்தில் சில ஆயிர பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என எண்ணிக்கையினை குறைத்து அனுமதி அளித்தது.

    அப்பொழுது ரத்து செய்யப்பட்ட தரிசனங்களில் ஒன்று தான் இந்த திவ்ய தரிசனம் ஆகும்.

    இந்நிலையில் தற்போது பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் திவ்ய தரிசனத்தினை துவங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது.

    அதன் படி தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பக்தர்கள் கூட்டமும் அதிகரிக்கும்.

    இதனையடுத்து ஏப்ரல் 1 இன்று முதல் மீண்டும் பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பதி
    ஆந்திரா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா

    ஆந்திரா

    ஆந்திராவின் புதிய தலைநகர் விசாகப்பட்டினம் - முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு முதல் அமைச்சர்
    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் தெலுங்கானா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து தெலுங்கானா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது தெலுங்கானா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025