NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் இருக்கும் தொடர்பு குறித்து இயக்குனர் அமீரிடம் விசாரணை
    அடுத்த செய்திக் கட்டுரை
    போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் இருக்கும் தொடர்பு குறித்து இயக்குனர் அமீரிடம் விசாரணை
    டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவின் தலைமையகத்திற்கு இயக்குனர் அமீர் நேரில் ஆஜராகி உள்ளார்

    போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் இருக்கும் தொடர்பு குறித்து இயக்குனர் அமீரிடம் விசாரணை

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 02, 2024
    01:12 pm

    செய்தி முன்னோட்டம்

    போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக்குடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

    இது தொடர்பாக, இன்று டெல்லியில் உள்ள போதை பொருள் தடுப்பு பிரிவின் தலைமையகத்தில் இயக்குனர் அமீர் நேரில் ஆஜராகி உள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்னர், இந்தியாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு திருட்டுத்தனமாக போதை பொருளை ஏற்றுமதி செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் NCB நடத்திய சோதனையில், மேற்கு டெல்லியில் உள்ள குடோனில் போதைப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படும் ரூ 2ஆயிரம் கோடி மதிப்பிலான 50கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்தபோது தான் ஜாபர் சாதிக் பற்றி தெரிய வந்தது.

    ஜாபிர் சாதிக்

    கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்

    இதனையடுத்து தலைமறைவான ஜாபர் சாதிக்கை மார்ச் மாதம் ராஜஸ்தானில் வைத்து கைது செய்துனர் போதை பொருள் தடுப்பு பிரிவினர்.

    இதனிடையே, ஜாபர்சாதிக் படத்தயாரிப்பில் இறங்கியிருந்ததும் தெரியவந்தது.

    குறிப்பாக அவரது தயாரிப்பில் இயக்குனர் அமீர், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தை எடுத்து வருகிறார் எனக்கூறப்பட்டது.

    அதோடு, ஜாபர் சாதிக் உடன் இணைந்து காபி ஷாப் ஒன்றை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதனையடுத்து இரண்டு பேருக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க இயக்குனர் அமீருக்கு சம்மன் அனுப்பட்டது.

    ரம்ஜான் ஈத் நிறைவுற்றதும் நேரில் ஆஜராவதாக கோரிக்கை கடிதத்தை இரு தினங்களுக்கு முன்னர் அமீர் அனுப்பி இருந்தார்.

    இந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலக்த்தில் இயக்குனர் அமீர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அமீர்
    போதைப்பொருள்
    ஜாபர் சாதிக்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    அமீர்

    வாடிவாசல் படத்தில் நடிக்கும் அமீர்; வெற்றிமாறன் பகிர்ந்த புகைப்படம் வைரல் வெற்றிமாறன்
    தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதிராஜா  இயக்குனர்
    அமீருடனான சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர்
    "போலியான வருத்தத்திற்கு உண்மையை பலி கொடுக்க முடியாது"- ஞானவேல் ராஜா அறிக்கைக்கு சசிகுமார் கண்டனம் தயாரிப்பாளர்

    போதைப்பொருள்

    இந்தியாவின் மிகப்பெரும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் பிடிபட்டது இந்தியா
    'லியோ' படத்தின் 'நா ரெடி' பாடலால் விஜய்க்கு வந்த சிக்கல்  விஜய்
    போதைப்பொருள் விற்பனைக்கு உடந்தை - 18 போலீசார் இடைநீக்கம் தமிழ்நாடு
    'மணிப்பூர் வன்முறைக்கு சீனா உதவுகிறது': முன்னாள் ராணுவத் தலைவர் குற்றச்சாட்டு  மணிப்பூர்

    ஜாபர் சாதிக்

    ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் போதைப்பொருள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025