NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து கட்டிடங்களின் அடித்தளத்தில் இயங்கும் பயிற்சி மையங்களுக்கு எதிராக நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து கட்டிடங்களின் அடித்தளத்தில் இயங்கும் பயிற்சி மையங்களுக்கு எதிராக நடவடிக்கை

    3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து கட்டிடங்களின் அடித்தளத்தில் இயங்கும் பயிற்சி மையங்களுக்கு எதிராக நடவடிக்கை

    எழுதியவர் Sindhuja SM
    Jul 28, 2024
    10:43 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியின் சில பகுதிகளில் நேற்று பெய்த கனமழையால், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் அடித்தளம் வெள்ளத்தில் மூழ்கியது. அதில் சிக்கி மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.

    அது நடந்து சில மணிநேரங்களே ஆகும் நிலையில், கட்டிடங்களின் அடித்தளத்தில் இயங்கும் அனைத்து பயிற்சி மையங்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு மேயர் ஷெல்லி ஓபராய் இன்று உத்தரவிட்டார்.

    பழைய ராஜிந்தர் நகர் பகுதியில் உள்ள ராவின் ஐஏஎஸ் படிப்பு வட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

    இதனையடுத்து, ஒரு அதிகாரப்பூர்வ உத்தரவை வெளியிட்ட ஷெல்லி ஓபராய், அடித்தளத்தில் இயங்கும் பயிற்சி மையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி மாநகராட்சி (எம்சிடி) ஆணையருக்கு உத்தரவிட்டார்.

    இந்தியா 

    திடீரென தண்ணீர் புகுந்ததால் மாணவர்கள் பலி 

    இதுபோன்ற பயிற்சி மையங்கள் கட்டிட விதிகளை மீறுவதாகவும், விதிமுறைகளின்படி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்த விபத்திற்கு எம்சிடியின் அதிகாரிகள் யாரேனும் காரணமா என்பதை அடையாளம் காண உடனடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் டெல்லி மேயர் கூறியுள்ளார்.

    நேற்று இரவு, தானியா சோனி, ஸ்ரேயா யாதவ் மற்றும் நவீன் டெல்வின் என அடையாளம் காணப்பட்ட மூன்று UPSC சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள், பயிற்சி மையத்தின் அடித்தளத்தில் திடீரென தண்ணீர் புகுந்ததால் அதில் மணிக்கணக்கில் சிக்கி உயிரிழந்தனர்.

    இதனையடுத்து, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டனர்.

    அதில் அந்த ஐஏஎஸ் பயிற்சி மைய உரிமையாளரும், ஒருங்கிணைப்பாளரும் அடங்குவர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி

    சமீபத்திய

    மழை பெய்யும்போது ஜொமாட்டோ, ஸ்விக்கியில் ஆர்டர் செய்பவரா நீங்கள்? அதிக டெலிவரி சார்ஜசிற்கு தயாராகுங்கள் ஸ்விக்கி
    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா

    டெல்லி

    மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது அரவிந்த் கெஜ்ரிவால்
    அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு அரவிந்த் கெஜ்ரிவால்
    காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் டெல்லி அமைச்சர் அதிஷி  ஆம் ஆத்மி
    கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு 2-3 நாட்கள் வரை இடைக்கால தடை: டெல்லி உயர்நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025