Page Loader
தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம் 

தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம் 

எழுதியவர் Sindhuja SM
Apr 29, 2024
04:05 pm

செய்தி முன்னோட்டம்

கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலத்தின் பெயரில் வாக்கு கேட்டதற்காகவும், அதனால் தேர்தல் நடத்தை விதிகளை(எம்சிசி) மீறியதற்காகவும், பிரதமர் நரேந்திர மோடியை 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தகுதி நீக்கம் செய்ய கோரிய மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் சமீபத்தில் ஆற்றிய உரையின் போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலத்தின் பெயரில் வாக்கு கேட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதற்காக தாக்கல் செய்த மனு தகுதியற்றது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதை தாக்கல் செய்த மனுதாரர் தேர்தல் ஆணையத்திடமும் இது தொடர்பாக மனு அளித்திருக்கிறார்.

இந்தியா 

தேர்தல் ஆணையம் பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு அறிவுறுத்தல்

எனவே, தேர்தல் ஆணையம் இன்னும் இதற்கு பதிலளிக்காத நிலையில், அதே மனுவை நீதிமன்றத்திலும் தாக்கல் செய்திருப்பது தவறு என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. "எம்சிசி விதிமீறல் நடந்திருப்பதாக கருதுவது மனுதாரரின் ஊகம் மட்டுமே. இது முற்றிலும் நியாயமற்றது. இந்த தகுதியற்ற மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று நீதிபதி சச்சின் தத்தா பெஞ்ச் உத்தரவிட்டது. ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பேரணியில், முஸ்லீம்களை ஊடுருவல்காரர்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டதாக தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன் பிறகு, அனைத்து நட்சத்திரப் பிரச்சாரகர்களும் அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் மிக உயர்ந்த அளவிலான வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையம் பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு அறிவுறுத்தியது.