NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இன்று முதல் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி விநியோகம், டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    இன்று முதல் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி விநியோகம், டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
    நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்வர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி வைக்கிறார்.

    இன்று முதல் மிக்ஜாம் புயல் நிவாரண நிதி விநியோகம், டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

    எழுதியவர் Srinath r
    Dec 17, 2023
    09:24 am

    செய்தி முன்னோட்டம்

    மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இன்று முதல் ₹6,000 நிவாரண நிதி வழங்கும் பணியை, முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைக்கிறார்.

    வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், வடகடலோர மாவட்டங்களுக்கு வரலாறு காணாத மழைப்பொழிவை தந்தது.

    இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக கனமழையால் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர்.

    இந்நிலையில், வீடு மற்றும் உடமைகளை இழந்தவர்களுக்கு ₹6,000 நிவாரண நிதி ஒரு வாரத்திற்குள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

    முன்னதாக நிவாரணத் தொகை வழங்குவதற்கு ஏதுவாக வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டது.

    டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதியில், நியாய விலை கடையில் நிவாரண நிதியை மக்கள் பெற்று கொள்ளலாம்.

    2nd card

    குடும்ப அட்டை இல்லாதவர்கள் நிவாரணம் பெறுவது எப்படி?

    நிவாரண நிதி வழங்கும் பணியை சென்னை வேளச்சேரி பகுதியில் உள்ள அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலை கடையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

    குடும்ப அட்டைகள் உள்ளவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் நிலையில், குடும்ப அட்டைகள் இல்லாதவர்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    அதனைத் தொடர்ந்து, குடும்ப அட்டை இல்லாதவர்களும் நிவாரண நிதி பெற தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது,

    அதன்படி, நியாய விலை கடைகளில் வழங்கப்படும் பிரத்யேக படிவத்தை பூர்த்தி செய்து வழங்க அரசு அறிவுறுத்தியுள்ளது.

    3rd card

    நிவாரண நிதி குறித்த சந்தேகங்களை தீர்க்க கட்டுப்பாட்டு அறை

    இன்று தொடங்கும் நிவாரண நிதி வழங்கும் பணி அடுத்தடுத்த நாட்களில், காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல்- மாலை 5 மணி வரையும் நடைபெற உள்ளது.

    நிவாரண நிதி குறித்த சந்தேகங்களை தீர்க்கவும், புகார்களை உடனுக்குடன் தீர்க்கவும், எழிலகத்தில் காலை 8:00 மணி முதல் இரவு 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்பட உள்ளது.

    பொதுமக்கள் 044-2859-2828, 1100 ஆகிய கட்டணம் இல்லா தொலைபேசி எண்கள் வாயிலாக, புகார் மற்றும் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம்.

    ட்விட்டர் அஞ்சல்

    நிவாரண நிதி சந்தேகங்களுக்கு கட்டுப்பாட்டு அறை திறப்பு

    மிக்ஜாம் புயல் நிவாரணம் குறித்த சந்தேகங்களை பொதுமக்களுக்கு தீர்க்க கட்டுப்பாட்டு அறை#CMMKSTALIN | #TNDIPR | #CycloneMichaung |@CMOTamilnadu @mkstalin @mp_saminathan pic.twitter.com/JTDrL5TqzW

    — TN DIPR (@TNDIPRNEWS) December 17, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஸ்டாலின்
    முடி பராமரிப்பு
    முதல் அமைச்சர்
    சென்னை

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    ஸ்டாலின்

    இருதயத்தில் 90% பிளாக், மனித உரிமைகள் ஆணையம் தலையீடு; அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தொடரும் திருப்பங்கள் செந்தில் பாலாஜி
    முதல்வர் கருணாநிதிக்காக, வைரமுத்து எழுதிய பாடல் வைரமுத்து
    அமைச்சர்கள் இலாகா மாற்றம் ஆளுநர் ஏற்பு; செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதற்கு மறுப்பு  ஆளுநர் மாளிகை
    எதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்? வைரலாகும் ஆளுநர் ரவியின் கடிதங்கள்  செந்தில் பாலாஜி

    முடி பராமரிப்பு

    அதிகப்படியான முடி உதிர்விற்கு காரணமாகும் 5 உணவு வகைகள் ஆரோக்கியம்
    முடி மாற்று அறுவை சிகிச்சையின் வகைகள் என்ன? அவற்றின் அபாயங்கள் மற்றும் பக்க விளைவுகள் பற்றிய சிறு தொகுப்பு மருத்துவ ஆராய்ச்சி
    அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பீர்களா? இந்த 4 பொருட்கள் உங்கள் ஷாம்பூவில் இல்லையென உறுதி செய்துகொள்ளுங்கள்! ஆரோக்கியம்
    இன்று சர்வதேச விக் நாள்: இந்நாளின் வரலாறும், சில சுவாரஸ்ய தகவல்களும் உடல் ஆரோக்கியம்

    முதல் அமைச்சர்

    பாஜகவை தோற்கடிப்பது வரலாற்று கடமை- முதல்வர் மு க ஸ்டாலின் பேச்சு ஸ்டாலின்
    மறைந்த பங்காரு அடிகளாரின் இறுதி சடங்கு இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் தமிழ்நாடு
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இந்தியா
    துர்கா ஸ்டாலின் கோவிலுக்கு செல்வது அவரின் தனிப்பட்ட விருப்பம்- முதல்வர் ஸ்டாலின் திமுக

    சென்னை

    மிக்ஜாம் புயல் நிவாரணம்: தனது ஒருமாத சம்பளத்தை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின் மு.க ஸ்டாலின்
    மிக்ஜாம் புயல் நிவாரணம்: உதவிக்கரம் நீட்டியுள்ள TVS நிறுவனம் டிவிஎஸ்
    சென்னையில் நடக்கவிருந்த பார்முலா 4 கார் பந்தயம் காலவரையறையின்றி ஒத்திவைப்பு  கார்
    புயல் பாதிப்பால் திரைத்துறையினர் சார்பில் நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு கலைஞர் கருணாநிதி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025