NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள்
    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள்

    நாகை கடலில் கலந்த கச்சா எண்ணெய் - செத்து மிதக்கும் மீன்கள்

    எழுதியவர் Nivetha P
    Mar 04, 2023
    03:05 pm

    செய்தி முன்னோட்டம்

    நாகை மாவட்டம் பட்டினசேரி மீனவ கிராமத்தில் சென்னை பெட்ரோலிய கழகத்திற்கு சொந்தமான குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளது.

    இதன் காரணமாக கடற்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    மேலும் கடலில் உள்ள மீன்களும் செத்து மிதப்பதாக தகவல்கள் வெளியானது.

    இதனையடுத்து அங்கு சென்ற அதிகாரிகள் குழாய் உடைப்பினை சரிசெய்ய முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு திரண்ட அப்பகுதி மீனவர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி குழாயை முழுமையாக அகற்ற வேண்டுமென கூறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    பொக்லைன் இயந்திரம்

    கடல் சீற்றத்தால் பிரித்தெடுக்கும் பணி தொய்வு

    முன்னதாக பட்டினசேரியில் மீனவ பஞ்சாயத்து தாரர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு, கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாயை நிரந்தரமாக அகற்ற வலியுறுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

    இதனையடுத்து மீனவர்கள் நேற்று(மார்ச்3) முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குழாயில் ஏற்பட்ட உடைப்பினை சீரமைக்க ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு கச்சா எண்ணெய் படிய வைத்து பிரித்தெடுக்கும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கடல் சீற்றம் காரணமாக பிரித்தெடுக்கும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், மீண்டும் நள்ளிரவில் இப்பணி துவங்கியது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் ஈரோடு
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக
    பழம்பெரும் எம்.என்.நம்பியாரின் விருதுகள் உள்ளிட்டவற்றிற்கு உரிமை கோரிய வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு தமிழ் திரைப்படம்

    இந்தியா

    eSIM-க்கு பதிலாக இனி ஸ்மார்ட்போன்களில் வரும் iSIM: எப்படி செயல்படும்? தொழில்நுட்பம்
    ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் புதிய விசாரணை கமிட்டி பிரேக்கிங் நியூஸ்
    உலக நிர்வாகம் தோல்வியடைந்துள்ளது: ஜி20 கூட்டத்தில் பிரதமர் மோடி மோடி
    டாம் அண்ட் ஜெர்ரியின் பழைய வீடியோவில் AI தொழில்நுட்பம் - வைரல்! செயற்கை நுண்ணறிவு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025