NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வீடு கட்ட தோண்டிய பள்ளத்திலிருந்து பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீடு கட்ட தோண்டிய பள்ளத்திலிருந்து பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
    வீடு கட்ட தோண்டிய பள்ளத்திலிருந்து பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

    வீடு கட்ட தோண்டிய பள்ளத்திலிருந்து பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

    எழுதியவர் Nivetha P
    Aug 28, 2023
    04:54 pm

    செய்தி முன்னோட்டம்

    கடலூர்-காட்டுமான்னார்கோயில் அருகில் உள்ள திருநாரையூர் என்னும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொல்லா பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது.

    இக்கோயில் அருகில் வசித்து வரும் உத்ராபதி என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் ஒன்றினை நேற்று(ஆகஸ்ட்.,27)ஆட்களை கொண்டு தோண்டியுள்ளார்.

    அப்போது பள்ளத்துக்குள் ஏதோ இருப்பது போல தென்பட்டுள்ளது.

    எனவே தொடர்ந்து பதமாக அப்பகுதியினை தோண்டி பார்த்ததில் 10 அடி ஆழத்தில் 6 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    அந்த சிலைகளை உத்ராபதி பத்திரமாக தனது வீட்டில் வைத்துக்கொண்ட நிலையில், இது குறித்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவ துவங்கியதையடுத்து, கடலூர் மாவட்ட எஸ்.பி.ராஜாராம், ஏ.எஸ்.பி.ரகுபதி, தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையிலான வருவாய்த்துறையினர், சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ரூபன்குமார் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் என்று கூறப்படுகிறது.

    சிலைகள் 

    ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணி தீவிரம் 

    அதன்படி உத்ராபதி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆடிப்பூர அம்மன், சிவன், பார்வதி, போகசக்தி அம்மன், பீடத்துடன் பஞ்சமூர்த்தி, இடம்புரி விநாயகர் உள்ளிட்ட சிலைகளை பார்வையிட்டுள்ளனர்.

    பின்னர், சிலைகள் எடுக்கப்பட்ட பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியினை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.

    அவர்கள் மேற்கொண்ட முயற்சியில் நடன சம்மந்தர், சண்டீகேஸ்வரர், நடராஜர் உள்ளிட்ட சில சிலைகள் பீடத்துடன் கிடைத்துள்ளது.

    மேலும் இதுகுறித்து இந்து அறநிலையத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன்பேரில், செயல் அலுவலர் வேல்விழி, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்டோரும் பள்ளம் தோண்டும் பணியினை தொடர்ந்து நேரில் கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

    கண்டெடுக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட பல கோடி மதிக்கத்தக்க சிலைகள் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கடலூர்
    அறநிலையத்துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    கடலூர்

    தமிழகத்தில் 4 இடங்களில் மிதக்கும் இறங்கு தளங்கள் அமைக்க அனுமதி தமிழ்நாடு
    கடலூரில் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாமக அழைப்பு பாமக
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு பாமக
    அன்பு ஜோதி ஆசிரமம் - கடலூர் தனியார் காப்பகத்தில் இருந்து 5 பேர் தப்பியோட்டம் விழுப்புரம்

    அறநிலையத்துறை

    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    சமயபுர மாரியம்மன் கோயில் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.556.39 கோடியாக உயர்வு தமிழ்நாடு
    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு தமிழ்நாடு
    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை  கடலூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025