NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வீடு கட்ட தோண்டிய பள்ளத்திலிருந்து பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
    வீடு கட்ட தோண்டிய பள்ளத்திலிருந்து பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
    இந்தியா

    வீடு கட்ட தோண்டிய பள்ளத்திலிருந்து பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

    எழுதியவர் Nivetha P
    August 28, 2023 | 04:54 pm 1 நிமிட வாசிப்பு
    வீடு கட்ட தோண்டிய பள்ளத்திலிருந்து பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு
    வீடு கட்ட தோண்டிய பள்ளத்திலிருந்து பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

    கடலூர்-காட்டுமான்னார்கோயில் அருகில் உள்ள திருநாரையூர் என்னும் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொல்லா பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் அருகில் வசித்து வரும் உத்ராபதி என்பவர் வீடு கட்டுவதற்காக பள்ளம் ஒன்றினை நேற்று(ஆகஸ்ட்.,27)ஆட்களை கொண்டு தோண்டியுள்ளார். அப்போது பள்ளத்துக்குள் ஏதோ இருப்பது போல தென்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து பதமாக அப்பகுதியினை தோண்டி பார்த்ததில் 10 அடி ஆழத்தில் 6 ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை உத்ராபதி பத்திரமாக தனது வீட்டில் வைத்துக்கொண்ட நிலையில், இது குறித்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவ துவங்கியதையடுத்து, கடலூர் மாவட்ட எஸ்.பி.ராஜாராம், ஏ.எஸ்.பி.ரகுபதி, தாசில்தார் தமிழ்ச்செல்வன் தலைமையிலான வருவாய்த்துறையினர், சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ரூபன்குமார் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர் என்று கூறப்படுகிறது.

    ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணி தீவிரம் 

    அதன்படி உத்ராபதி வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஆடிப்பூர அம்மன், சிவன், பார்வதி, போகசக்தி அம்மன், பீடத்துடன் பஞ்சமூர்த்தி, இடம்புரி விநாயகர் உள்ளிட்ட சிலைகளை பார்வையிட்டுள்ளனர். பின்னர், சிலைகள் எடுக்கப்பட்ட பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டும் பணியினை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர். அவர்கள் மேற்கொண்ட முயற்சியில் நடன சம்மந்தர், சண்டீகேஸ்வரர், நடராஜர் உள்ளிட்ட சில சிலைகள் பீடத்துடன் கிடைத்துள்ளது. மேலும் இதுகுறித்து இந்து அறநிலையத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன்பேரில், செயல் அலுவலர் வேல்விழி, வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர்வாக அலுவலர் ரவி உள்ளிட்டோரும் பள்ளம் தோண்டும் பணியினை தொடர்ந்து நேரில் கண்காணித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. கண்டெடுக்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் ஐம்பொன்னால் செய்யப்பட்ட பல கோடி மதிக்கத்தக்க சிலைகள் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கடலூர்
    அறநிலையத்துறை

    கடலூர்

    NLC கலவரம்: 28 பாமக-வினருக்கு 15 நாட்கள் காவல் நெய்வேலி
    பஸ் கண்ணாடி உடைப்பு, 400 பேர் கைது, போக்குவரத்து நிறுத்தம்: கலவரபூமியாக மாறிய நெய்வேலி கைது
    என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது  பாமக
    என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம்  காவல்துறை

    அறநிலையத்துறை

    திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கிழக்கு கோபுர சுவர் இடிந்து விழுந்தது  திருச்சி
    பழநி முருகன் கோயிலில் முடி காணிக்கை செய்தவர்களின் புகைப்படத்துடன் இலவச டிக்கெட்  திருவிழா
    சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்கள் வைத்த பதாகையினை அகற்றிய அறநிலையத்துறை  காவல்துறை
    திருவேடகத்தில், திருஞானசம்பந்தர் பாடல் எழுதப்பட்ட தங்க ஏடு கண்டுபிடிப்பு தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023