NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி
    கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி

    கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி

    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023
    03:20 pm

    செய்தி முன்னோட்டம்

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் உள்ள கீழவீதி பகுதியில் நேற்று இரவு(ஜன., 22) திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது.

    இந்த திருவிழாவில் சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர்.

    இந்த திருவிழாவில் பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி சாமிக்கு மாலை அணிவிக்க வந்தனர்.

    அப்பொழுது எதிர்பாரா விதமாக கிரேன் கவிழ்ந்து விழுந்தது.

    இதில் கிரேனில் தொங்கியபடி வந்த கீழவீதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் ஜோதி பாபு கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    அவரை தொடர்ந்து, கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூலி தொழிலாளி முத்து(39) மற்றும் கீழ்ஆவதம் பூபாலன்(40) ஆகியோரும் உயிரிழந்தார்கள்.

    மேலும் இந்த விபத்தில் ஓர் பெண் குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்

    பாதுகாப்பு நடவடிக்கைகள்

    தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு

    விபத்தில் படுகாயமடைந்தவர்கள் புன்னை அரசு ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில் இன்று(ஜன., 23) கீழ்வீதி கிராம திருவிழாவில் கிரேன் விழுந்த விபத்தில் பெரப்பெரி காலனியை சேர்ந்த சின்னசாமி(85) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    இந்த விபத்து குறித்து போலீசார் கிரேன் ஆபரேட்டரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விபத்து குறித்து தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி சம்பவஇடத்திற்கு நேரில்சென்று ஆய்வுசெய்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்துபேசிய அவர், திவிழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    சாலை சரியில்லாத காரணத்தினால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    மேலும், இனி இவ்வாறு நடைபெறாமல் இருக்க மருத்துவர், ஆம்புலன்ஸ் போன்ற பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ட்விட்டர் அஞ்சல்

    கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - வைரலாகும் வீடியோ

    #அரக்கோணம் அடுத்த கீழ் விதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா #கிரேன் மூலமாக மாலை செலுத்து முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக க்ரீன் விழுந்து 8 பேர் படுகாயம்.. 2 பேர் உயிரிழப்பு #Arakonnam_crane_accident pic.twitter.com/agXhAgIydu

    — RAMJI (@newsreporterra1) January 22, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    புத்தக கண்காட்சி: சிறைவாசிகளுக்கு தானம் கொடுக்கலாம் சென்னை
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் கோவை
    குடிநீர் தொட்டியில் மனித கழிவுகளைக் கலந்த சம்பவம்: சட்டப்பேரவையில் முதல்வர் பேச்சு ஸ்டாலின்
    சேது சமுத்திரம் திட்டம் தமிழக சட்டபேரவையில் ஒரு மனதாக நிறைவேறியது ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025