NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி
    இந்தியா

    கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி

    கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி
    எழுதியவர் Nivetha P
    Jan 23, 2023, 03:20 pm 1 நிமிட வாசிப்பு
    கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி
    கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் உள்ள கீழவீதி பகுதியில் நேற்று இரவு(ஜன., 22) திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார ஊர்களில் இருந்தும் பக்தர்கள் பெரும் திரளாக கலந்துகொண்டனர். இந்த திருவிழாவில் பக்தர்கள் கிரேனில் தொங்கியபடி சாமிக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்பொழுது எதிர்பாரா விதமாக கிரேன் கவிழ்ந்து விழுந்தது. இதில் கிரேனில் தொங்கியபடி வந்த கீழவீதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவர் ஜோதி பாபு கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அவரை தொடர்ந்து, கீழே நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கூலி தொழிலாளி முத்து(39) மற்றும் கீழ்ஆவதம் பூபாலன்(40) ஆகியோரும் உயிரிழந்தார்கள். மேலும் இந்த விபத்தில் ஓர் பெண் குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்

    தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு

    விபத்தில் படுகாயமடைந்தவர்கள் புன்னை அரசு ஆரம்பசுகாதார நிலையம் மற்றும் அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இன்று(ஜன., 23) கீழ்வீதி கிராம திருவிழாவில் கிரேன் விழுந்த விபத்தில் பெரப்பெரி காலனியை சேர்ந்த சின்னசாமி(85) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் கிரேன் ஆபரேட்டரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து குறித்து தகவலறிந்த வேலூர் சரக டிஐஜி முத்துசாமி சம்பவஇடத்திற்கு நேரில்சென்று ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துபேசிய அவர், திவிழாவிற்கு அனுமதி வழங்கப்பட்டது. சாலை சரியில்லாத காரணத்தினால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும், இனி இவ்வாறு நடைபெறாமல் இருக்க மருத்துவர், ஆம்புலன்ஸ் போன்ற பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - வைரலாகும் வீடியோ

    #அரக்கோணம் அடுத்த கீழ் விதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா #கிரேன் மூலமாக மாலை செலுத்து முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக க்ரீன் விழுந்து 8 பேர் படுகாயம்.. 2 பேர் உயிரிழப்பு #Arakonnam_crane_accident pic.twitter.com/agXhAgIydu

    — RAMJI (@newsreporterra1) January 22, 2023
    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது மதுரை
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் சாதனை டி20 கிரிக்கெட்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் இந்தியா
    அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20யில் அபார வெற்றி! தொடரையும் கைப்பற்றியது வங்கதேசம் டி20 கிரிக்கெட்

    தமிழ்நாடு

    பெற்றோர்கள் இறப்பால் அனாதையான 2 வயது சிறுவன் அமெரிக்காவில் இருந்து மீட்கபடுவான்: தமிழக அரசு உறுதி இந்தியா
    இந்தி திணிப்பு: தயிர் பாக்கெட்டுகளில் 'தாஹி' என்ற பெயரை போட அறிவுறுத்தல் கர்நாடகா
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    தமிழக மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023