NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு

    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு

    எழுதியவர் Nivetha P
    Feb 22, 2023
    06:47 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கான உதவி தொகை ரூ.20,000ஆக தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த தொகையினை தமிழக அரசு தற்போது உயர்த்தி அதற்கான அரசாணையினை வெளியிட்டுள்ளது.

    அதில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனுமதிக்கப்பட்ட திட்ட செலவின தொகை 20,000ல் இருந்து ரூ.50,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதற்கான தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்களில் நடத்தப்படும் இலவச திருமணங்களுக்கு திட்ட செலவின தொகை ரூ.20,000லிருந்து ரூ.50,000ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் இணை ஆணையர் மண்டபத்தில் 25 ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்யப்பட்டு வருகிறது.

    அரசாணை பிறப்பிக்க கோரிக்கை

    20 மண்டலங்களில் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணத்திற்கான செலவின தொகை ரூ.1,00,00,000

    அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 20 மண்டலங்களில் 500 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்ய மொத்த செலவின தொகை ரூ.1,00,00,000 திருக்கோயில் நிதி மூலம் மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    மேலும் இதுவரை 20 இணை ஆணையர் மண்டலங்களில் 217 இணைகளுக்கு திருமணம் நடத்தப்பட்டு சீர்வரிசை பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது என்றும்,

    இன்னும் 283 ஜோடிகளுக்கு திருக்கோயில் மூலம் திருமணம் செய்துவைக்க படவுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, இதற்கான திட்ட செலவை திருக்கோயில் நிதி மூலம் செலவினம் மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கவேண்டும் என்றும் ஆணையர் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    கோவில்கள்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    தமிழக அரசு

    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு தமிழ்நாடு
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழ்நாடு
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழ்நாடு
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? திமுக

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025