NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் சந்தித்தது என்பது அப்பட்டமான பொய்': பாஜக எம்பிக்கு காங்கிரஸ் பதிலடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் சந்தித்தது என்பது அப்பட்டமான பொய்': பாஜக எம்பிக்கு காங்கிரஸ் பதிலடி 
    இதற்கு காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் பதிலளித்துள்ளார்

    'சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் காங்கிரஸ் சந்தித்தது என்பது அப்பட்டமான பொய்': பாஜக எம்பிக்கு காங்கிரஸ் பதிலடி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 14, 2023
    09:59 am

    செய்தி முன்னோட்டம்

    சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் "தேசத்துரோக" குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும் என்று பாஜக எம்பி ராஜ்யவர்தன்-சிங்-ரத்தோர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்த நிலையில், அவர் "அப்பட்டமான பொய்கள்" பேசுவதாக காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது.

    கடந்த வியாழக்கிழமை, பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது மக்களவையில் பேசிய ரத்தோர், "நான் 2008-பெய்ஜிங் ஒலிம்பிக்கிஸுக்கு சென்றிருந்தேன். சோனியா-காந்தியும், ராகுல்-காந்தியும் அவர்கள் எங்களை சந்திக்க வராமல், சீன கம்யூனிஸ்ட் கட்சியைச் சந்தித்தனர். அவர்கள் தேசத்துரோக குற்றத்திற்காக விசாரிக்கப்பட வேண்டும்" என்று ரத்தோர் கூறியிருந்தார்.

    "அவர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒரு ரகசிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட அப்போது சீனா சென்றனர். அந்த ரகசிய ஒப்பந்தம் என்ன என்பதை தேசம் அறிய விரும்புகிறது." என்றும் ரத்தோர் கூறி இருந்தார்.

    லவ்லவ்ஜ்

    'பொய் சொல்வதில் வல்லுனர்களாக இருக்கும் கட்சி': காங்கிரஸ் 

    இதற்கு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் , "நீங்கள் ஒரு காலத்தில் இந்திய இராணுவத்தின் ஒரு பகுதியாக இருந்ததற்காக நான் வெட்கப்படுகிறேன் ராஜ்யவர்தன் ரத்தோர்... 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில், சோனியா காந்தி விளையாட்டு கிராமத்திற்குச் சென்றது மட்டுமல்லாமல், இந்தியத் தொகுதியில் உள்ள இந்திய விளையாட்டு வீரர்களையும் சந்தித்தார். இதை குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கே உறுதிப்படுத்தினார். மேலும், அபினவ் பிந்த்ரா இதை தனது 'எ ஷாட் அட் ஹிஸ்டரி' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். இது உங்கள் கட்சியின் செல்வாக்கை பிரதிபலிக்கிறது. பிரதமரும் உள்துறை அமைச்சரும் கூட பொய் சொல்வதில் வல்லுனர்களாக இருக்கும் போது அந்த கட்சியை சேர்ந்த நீங்களும் அப்படி தானே இருப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாஜக
    காங்கிரஸ்

    சமீபத்திய

    EPFO 3.0: ஜூன் 2025இல் அமலுக்கு வரும் புதிய திட்டம்; விரைவில் கிளைம் பணத்தை ஏடிஎம்மிலேயே பெறலாம் வருங்கால வைப்பு நிதி
    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    பாஜக

    மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் - பிரிஜ் பூஷனுக்கு சம்மன்  கைது
    ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி எதிரொலி - 12ம் தேதி அமைதி போராட்டம்  ராகுல் காந்தி
    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலால் வன்முறை: 9 பேர் பலி மேற்கு வங்காளம்
    ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி தெலுங்கானா

    காங்கிரஸ்

    பள்ளி பாடபுத்தங்களில் இருந்து RSS நிறுவனரின் அத்தியாயங்களை நீக்கியது கர்நாடக அரசு கர்நாடகா
    கர்நாடக முதல்வர் பதவிக்கு அடித்து கொள்ளும் சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாரின் விசுவாசிகள்  கர்நாடகா
    வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: கொல்கத்தாவின் மிகப்பெரும் வகுப்புவாத கலவரத்தின் பின்னணி- பகுதி 2 வரலாற்று நிகழ்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025