NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராகுல் காந்திக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு - காங்கிரஸ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராகுல் காந்திக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு - காங்கிரஸ்
    ராகுல் காந்திக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு - காங்கிரஸ்

    ராகுல் காந்திக்கு எதிராக விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு - காங்கிரஸ்

    எழுதியவர் Nivetha P
    Mar 24, 2023
    01:11 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.

    எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள் என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையானது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ் மோடி அவமதிப்பு வழக்கினை பதிவு செய்திருந்தார்.

    இதன் தீர்ப்பு நேற்று(மார்ச்.,23) குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.

    அதன்படி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் 30 நாட்களுக்குள் தீர்ப்புக்கு எதிராக ராகுல் காந்தி மேல்முறையீடு செய்யலாம் என்றும் சூரத் நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    மோடி அரசு

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே மேல்முறையீடு செய்வதாக தகவல்

    இதற்கிடையே ராகுல்காந்திக்கு எதிராக தீர்ப்பு வந்தநிலையில் காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஆங்காங்கே பதற்றமான சூழல் நிலவியது.

    அந்தவகையில் சென்னை வருவதற்காக கும்பகோணத்தில் காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று கும்பகோண ரயில்நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தார்.

    அப்போது இந்த தீர்ப்பு குறித்து அறிந்த அவர் உடனே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இவ்வாறாக நாடுமுழுவதும் இந்த தீர்ப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யபோவதாக காங்கிரஸ் தற்போது அறிவித்துள்ளது.

    இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, மோடி அரசு அமலாக்கத்துறை இயக்குனரகம், போலீசை அனுப்புகிறது.

    அரசியல் தரப்பு பேச்சுக்கள் குறித்து வழக்குகளை போடுகிறது.

    நாங்கள் மேல் கோர்ட்டில் மேல்முறையீடுசெய்து பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ராகுல் காந்தி
    காங்கிரஸ்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ஜம்மு காஷ்மீர்
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் ஜம்மு காஷ்மீர்
    ஊழல் நிறைந்த காங்கிரஸ் ஆட்சி : ராகுல் காந்தியை மறைமுகமாக சாடிய பிரதமர் மோடி மோடி
    வைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ இந்தியா

    காங்கிரஸ்

    1970இல் பிபிசி-யை தடை செய்த இந்திரா காந்தி: ஒரு பார்வை இந்தியா
    சில எம்.பி.க்கள் இந்த சபைக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்: பிரதமர் மோடி இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    மற்ற கட்சிகளை விட பாஜகவின் கார்பரேட் நன்கொடை 7 மடங்கு அதிகம்: ADR பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025