NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு 
    சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு

    சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு 

    எழுதியவர் Nivetha P
    Jul 01, 2023
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டமானது நேற்று(ஜூன்.,30)மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நடந்தது.

    இக்கூட்டத்தில் துணைமேயர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

    அப்போது இக்கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதன்படி, சென்னையில் மாநகராட்சி சார்பில் கோடம்பாக்கம் மண்டலஅலுவலகம், தியாகராயநகர் டாக்டர்.நாயர் சாலை பழைய வணிக வளாகம், ராஜா அண்ணாமலைபுரம் வணிக வளாகம் மற்றும் சி.பி.ராமசாமி சாலை வணிக வளாகம் உள்ளிட்ட 4 இடங்களில் ரூ.162கோடி செலவில் ஒருங்கிணைந்த வாகனநிறுத்தத்தினை அமைப்பது குறித்து மாநிலஅரசிடம் கோர மன்றக்கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் ரூ.300கோடியில் பிராட்வே பேருந்துநிலையத்தினை பல வணிகவளாகங்களை கொண்ட போக்குவரத்து முனையமாக மாற்றவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, சென்னை குடிநீர்வாரியத்திடம் சென்னையின் பராமரிப்பிலுள்ள 53 அம்மா குடிநீர்நிலையங்களை வழங்கவும் ஒப்புதல் கிடைத்துள்ளது.

    மன்றக்கூட்டம் 

    பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி கொடுக்கும் ஆசிரியர்களுக்கு கல்வி சுற்றுலா 

    மேலும், மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 1240 காலி பணியிடங்களில் ஒப்பந்த ஆசிரியர்களை நியமிக்கவும் ஒப்புதல் கிடைத்துள்ளது.

    அதே போல் மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி கொடுக்கும் ஆசிரியர்களை கல்வி சுற்றுலா அழைத்து செல்வதோடு, அவர்களது ஊக்கத்தொகை ரூ.1,500ல் இருந்து ரூ.3,000ஆக உயர்த்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளை சென்னை எண்ணூர் துறைமுகம், ஆவின், அண்ணா நூற்றாண்டு நூலகம், பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அழைத்துச்செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நினைவாக சிலை அமைத்தல், மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமரான வி.பி.சிங் சிலை உள்ளிட்டவைகளை அமைக்கவும் இந்த கூட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    சுற்றுலா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    அதிமுக பொதுக்குழு தொடர்பான ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம்  அதிமுக
    இந்தியாவில் 35% பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக தகவல்  இந்தியா
    கிண்டி மருத்துவமனை: முதலமைச்சர் ஸ்டாலின் திறக்கப்போகிறாரா? திரௌபதி முர்மு
    சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு மெட்ரோ

    சுற்றுலா

    சுற்றுலாவின் போது நீங்கள் நோய்வாய்ப்படுவதை எவ்வாறு தவிர்க்கலாம் என நிபுணர்கள் கூறுகிறார்கள் உடல் நலம்
    ஷெங்கன் விசா பெறுவதற்கு எளிமையான நடைமுறைகளை பின்பற்றும் சில நாடுகள் உலகம்
    சுற்றுலா என்றால் வெளிநாடுகளுக்கு செல்வது மட்டுமல்ல - சித்தார்த் கண்டோத் சென்னை
    கிரீஸிற்க்கு சுற்றுலா செல்கிறீர்களா? நீங்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் இதோ உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025