NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது 
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது 
    இந்தியா

    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது 

    எழுதியவர் Nivetha P
    April 17, 2023 | 07:51 pm 0 நிமிட வாசிப்பு
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது 
    கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதற்காக கடத்திய பேராசிரியை கணவர் கைது

    கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததில் பேராசிரியையின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் சூலூர் சுற்று வட்டாரத்தில் உள்ள கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக அண்மையில் காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் ரோந்து பணியினை தீவிரப்படுத்தினர். அதன்படி, சிந்தாமணி புதூர் அருகே திருச்சி சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகம் அளிக்கும் விதத்தில் தோளில் ஒரு பையினை மாட்டிக்கொண்டு நின்றிருந்தவரை பார்த்த போலீசார் அவரை அழைத்து விசாரித்துள்ளார்கள். அப்போது அந்த நபர் போலீசிடம், நான் டாக்டரேட் பட்டம் பெற்றவன். என்னையே சந்தேகப்படுகிறீர்களா?என்று கேள்வி எழுப்பி விசாரணைக்கு ஒத்துழைக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

    1200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்

    இதனால் மேலும் அந்த நபர் மீது சந்தேகமுற்ற போலீசார் அவரை சோதனையிட்டனர். அப்போது அவரின் லுங்கியில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்த சென்றுள்ளனர். அங்கு வைத்து போலீசார் அவரிடம் விசாரித்ததில், அவர் ஆனைக்கட்டி பகுதியினை சேர்ந்த மனோஜ்குமார்(45) என்பதும், எம்சிஏ பட்டம் பெற்றவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் அதிகம் படித்த இவர் அந்த சூலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 1200 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவரது மனைவி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கோவை
    காவல்துறை
    காவல்துறை

    கோவை

    கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாடு
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    GD நாயுடு: மற்றுமொரு வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் மாதவன் திரைப்பட அறிவிப்பு
    சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவைக்கான முன்பதிவு துவங்கியது வந்தே பாரத்

    காவல்துறை

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - முன்னாள் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு  திருநெல்வேலி
    நாமக்கல் மாவட்டத்தில் மாணவிகளை ஆபாசமாக படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர் கைது  தமிழ்நாடு
    சென்னையில் 10ம் வகுப்பு கணித தேர்வுக்கு பயந்து தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவி  சென்னை
    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - பல்வீர் சிங் மீது மேலும் ஒரு புகார்  திருநெல்வேலி

    காவல்துறை

    திருநெல்வேலி பல் பிடுங்கிய விவகாரம் - புதிய காவல் ஆய்வாளர்கள் நியமனம்  திருநெல்வேலி
    திருநெல்வேலியில் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிசிடிவி காட்சிகள் மாயம் திருநெல்வேலி
    முன்னாள் காதலியின் திருமணத்திற்கு வெடிகுண்டை பரிசளித்த நபர் கைது இந்தியா
    கோழிக்கோடு ரயிலில் சக பயணியை தீ வைத்து எரித்த நபர்: 3 உடல்கள் கண்டெடுப்பு இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023