NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள்
    இந்தியா

    'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள்

    'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள்
    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023, 05:59 pm 1 நிமிட வாசிப்பு
    'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள்
    'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம்

    ஏழை எளிய மக்கள் சிறியளவிலான தொகையை தபால் நிலையங்களில் சேமிக்க முடியும் என்பதால், நகரத்தை விட கிராமங்களில் உள்ள மக்களுக்கும் தபால் நிலையத்திற்கும் உள்ள உறவு காலகாலமாக நீடித்து வருகிறது. இந்தியாவில் 1 லட்சத்து 55 ஆயிரம் தபால்நிலையங்கள் உள்ளன. இவற்றை கணினிவாயிலாக ஒருங்கிணைக்கவும், இணையத்தள சேவையை மேம்படுத்தும் வகையிலும் அஞ்சல் துறைக்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு, தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், தபால் நிலையங்களில் உள்ள கணினிகளை இணைக்கும் 'சர்வர்' அடிக்கடி செயலிழந்து விடுவதால் தபால்நிலைய பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதுகுறித்து பெரிய நாயக்கப் பாளைய மக்கள் கூறுகையில், "சர்வர் வேலை செய்யாததால் விரைவு தபால்களை அனுப்புவது மட்டுமின்றி, சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்த முடியவில்லை" என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

    கோவையில் அடிக்கடி ஏற்படும் 'சர்வர்' முடக்கம்

    மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாக கோவையில் உள்ள 80க்கும் மேற்பட்ட துணை தபால்நிலையங்கள் மற்றும் தலைமை தபால்நிலையங்களை இணைக்கும் சர்வர் செயலிழந்ததால் அனைத்து சேவைகளும் முடங்கி உள்ளது. இதனால் ஸ்பீடுபோஸ்ட், மணியார்டர் அனுப்ப முடியவில்லை என்பதோடு, இதில் கணக்கு வைத்துள்ள மக்கள் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சர்வர் பிரச்சனை என்றாவது ஒருநாள் என்றால் கூட பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் மாதத்திற்கு ஐந்து முறையாவது இந்த சர்வர் பிரச்சனை ஏற்படுகிறது என்றும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து, இந்த சர்வர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை தபால்நிலையம் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். கோவையில் கடந்த இருநாட்களாக நிலவிய இந்த சர்வர் பிரச்சனை நேற்று சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    கோவை

    சமீபத்திய

    கடன் வாங்கியோருக்கு மீண்டும் அதிர்ச்சி! ரெப்போ வட்டி மீண்டும் உயரப்போகிறதா? தொழில்நுட்பம்
    புதிதாக ஒரு ரிலேஷன்ஷிப்பில் இணைகிறீர்களா? உங்களுக்காகவே சில முக்கிய டிப்ஸ் உறவுகள்
    தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    சிலிக்கான் வங்கியின் வைப்புகளும் கடன்களும் முதல் குடிமக்கள் வங்கிக்கு விறக்கப்பட்டது உலகம்

    தமிழ்நாடு

    ஈரோடு மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் 3 யானைகள் பலி ஈரோடு
    இந்தியாவின் கடைசி வாழும் சதிர் நடன கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாள் பத்மஸ்ரீ விருது
    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி

    கோவை

    கோவை பெரியநாயக்கம்பாளையம் பூச்சியூரில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி மாவட்ட செய்திகள்
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை காவல்துறை
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர் காவல்துறை
    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023