NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள்
    'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம்

    'சர்வர்' முடக்கம் காரணமாக தபால் நிலைய சேவைகள் நிறுத்தம் - திண்டாடும் பொதுமக்கள்

    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023
    05:59 pm

    செய்தி முன்னோட்டம்

    ஏழை எளிய மக்கள் சிறியளவிலான தொகையை தபால் நிலையங்களில் சேமிக்க முடியும் என்பதால், நகரத்தை விட கிராமங்களில் உள்ள மக்களுக்கும் தபால் நிலையத்திற்கும் உள்ள உறவு காலகாலமாக நீடித்து வருகிறது.

    இந்தியாவில் 1 லட்சத்து 55 ஆயிரம் தபால்நிலையங்கள் உள்ளன.

    இவற்றை கணினிவாயிலாக ஒருங்கிணைக்கவும், இணையத்தள சேவையை மேம்படுத்தும் வகையிலும் அஞ்சல் துறைக்கான மென்பொருள் உருவாக்கப்பட்டு, தற்போது உபயோகத்தில் இருந்து வருகிறது.

    இந்நிலையில், தபால் நிலையங்களில் உள்ள கணினிகளை இணைக்கும் 'சர்வர்' அடிக்கடி செயலிழந்து விடுவதால் தபால்நிலைய பயனாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.

    இதுகுறித்து பெரிய நாயக்கப் பாளைய மக்கள் கூறுகையில், "சர்வர் வேலை செய்யாததால் விரைவு தபால்களை அனுப்புவது மட்டுமின்றி, சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்த முடியவில்லை" என்று வருத்தம் தெரிவிக்கிறார்கள்.

    நிரந்தர தீர்வு காணவேண்டும்

    கோவையில் அடிக்கடி ஏற்படும் 'சர்வர்' முடக்கம்

    மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த இரண்டு நாட்களாக கோவையில் உள்ள 80க்கும் மேற்பட்ட துணை தபால்நிலையங்கள் மற்றும் தலைமை தபால்நிலையங்களை இணைக்கும் சர்வர் செயலிழந்ததால் அனைத்து சேவைகளும் முடங்கி உள்ளது.

    இதனால் ஸ்பீடுபோஸ்ட், மணியார்டர் அனுப்ப முடியவில்லை என்பதோடு, இதில் கணக்கு வைத்துள்ள மக்கள் பணம் எடுக்க முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த சர்வர் பிரச்சனை என்றாவது ஒருநாள் என்றால் கூட பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் மாதத்திற்கு ஐந்து முறையாவது இந்த சர்வர் பிரச்சனை ஏற்படுகிறது என்றும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

    தொடர்ந்து, இந்த சர்வர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வினை தபால்நிலையம் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

    கோவையில் கடந்த இருநாட்களாக நிலவிய இந்த சர்வர் பிரச்சனை நேற்று சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    தமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் வானிலை எச்சரிக்கை
    இஸ்ரோவின் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டம் தோல்வி; ஏவப்பட்ட சில நிமிடங்களில் EOS-09 மாயம் இஸ்ரோ
    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    தமிழ்நாடு

    ரூ.25.14 கோடி செலவில் 'நீலகிரி வரையாடு திட்டம்' - தமிழக அரசாணை பிறப்பிப்பு தமிழக அரசு
    பால் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க ஏற்பாடு - 'ஆவின்' நிர்வாகம் எடுத்த அதிரடி நடவடிக்கை மாநிலங்கள்
    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு தமிழக அரசு
    திமுக முன்னாள் எம்பி மஸ்தானின் மரணம் இயற்கையல்ல ஒரு கொலை! திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025