NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம்
    இந்தியா

    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம்

    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம்
    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023, 01:33 pm 1 நிமிட வாசிப்பு
    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம்
    ஆதார் எண் இணைப்பு அவசியம் - தமிழக அரசு

    பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு தமிழக அரசு ஓர் புதிய செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி, "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், சொந்தமாக வைத்துள்ள விவசாயிகளுக்கு உதவித்தொகையாக 4மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 தவணைகளை இந்த கிசான் பயனாளர்கள் பெற்றுள்ளார்கள். இதனையடுத்து இம்மாத இறுதியில் 13வது தவணையை அளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. பி.எம்.கிசான் வலைத்தளத்தில் ஆதார் எண்ணை உறுதிசெய்த (e-KYC), வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளிகளில் 8,84,120 பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை இன்னும் உறுதி செய்யாமல் இருந்தது தெரியவந்தது.

    வேளாண் உழவர் நலத்துறை மேற்கொண்ட தீவிர நடவடிக்கை - 5,27,934 பயனாளிகளின் ஆதார் எண் உறுதி

    இதனை தொடர்ந்து, வேளாண்மை உழவர் நலத் துறையானது கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அஞ்சல்துறை மற்றும் பொதுசேவை மையத்துடன் இணைந்து கிராமம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதோடு, வீடுவீடாக சென்று ஆதார்எண்ணை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் பயனாக 5,27,934 தகுதியான பயனாளிகளின் ஆதார்எண் உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 3,56,186 தகுதியான பயனாளிகளுக்கும் ஆதார் எண் உறுதி செய்ய பணி வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது வருகிறது. இது தொடர்பாக சந்தேகம் ஏதும் இருந்தால், உங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகலாம் என்றும் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் உள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழக அரசு
    ஆதார் புதுப்பிப்பு

    சமீபத்திய

    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்
    சென்னை மாநகராட்சி பட்ஜெட்-2023ன் முக்கிய அம்சங்கள் ஓர் பார்வை பட்ஜெட் 2023
    அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த வழக்கில் நாளை தீர்ப்பு அதிமுக

    தமிழக அரசு

    தமிழகத்தில் பெண்கள் உரிமை தொகை ரூ.1000 குறித்து எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் எடப்பாடி கே பழனிசாமி
    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்
    தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு தமிழ்நாடு

    ஆதார் புதுப்பிப்பு

    மார்ச் 31 கடைசி நாள் - SMS மூலம் பான் மற்றும் ஆதாரை இணைப்பது எப்படி? இந்தியா
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு இந்தியா
    10 ஆண்டு ஆன ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் - புதிய தகவல் தொழில்நுட்பம்
    உங்கள் ஆதார் கார்டு தொலைந்துவிட்டால் முதலில் என்ன செய்யவேண்டும்? தொழில்நுட்பம்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023