NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம்
    ஆதார் எண் இணைப்பு அவசியம் - தமிழக அரசு

    பி.எம். கிசான் திட்டத்தின் 13வது தவணைத் தொகைக்கு ஆதார் இணைப்பு அவசியம்

    எழுதியவர் Nivetha P
    Jan 12, 2023
    01:33 pm

    செய்தி முன்னோட்டம்

    பி.எம்.கிசான் பயனாளிகளுக்கு தமிழக அரசு ஓர் புதிய செய்தி குறிப்பினை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, "பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி" திட்டமானது 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், சொந்தமாக வைத்துள்ள விவசாயிகளுக்கு உதவித்தொகையாக 4மாதத்திற்கு ஒரு முறை ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.

    இதுவரை 12 தவணைகளை இந்த கிசான் பயனாளர்கள் பெற்றுள்ளார்கள்.

    இதனையடுத்து இம்மாத இறுதியில் 13வது தவணையை அளிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    பி.எம்.கிசான் வலைத்தளத்தில் ஆதார் எண்ணை உறுதிசெய்த (e-KYC), வங்கிக்கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்த பயனாளிகளுக்கு மட்டுமே என கூறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்ற பயனாளிகளில் 8,84,120 பயனாளிகள் தங்களது ஆதார் எண்ணை இன்னும் உறுதி செய்யாமல் இருந்தது தெரியவந்தது.

    வேளாண்மை-உழவர் நலத்துறை

    வேளாண் உழவர் நலத்துறை மேற்கொண்ட தீவிர நடவடிக்கை - 5,27,934 பயனாளிகளின் ஆதார் எண் உறுதி

    இதனை தொடர்ந்து, வேளாண்மை உழவர் நலத் துறையானது கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அஞ்சல்துறை மற்றும் பொதுசேவை மையத்துடன் இணைந்து கிராமம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதோடு, வீடுவீடாக சென்று ஆதார்எண்ணை உறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    தமிழக அரசு மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கையின் பயனாக 5,27,934 தகுதியான பயனாளிகளின் ஆதார்எண் உறுதி செய்யப்பட்டுள்ளன.

    மீதமுள்ள 3,56,186 தகுதியான பயனாளிகளுக்கும் ஆதார் எண் உறுதி செய்ய பணி வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்கள் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது வருகிறது.

    இது தொடர்பாக சந்தேகம் ஏதும் இருந்தால், உங்கள் வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகலாம் என்றும் தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில் உள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழக அரசு
    ஆதார் புதுப்பிப்பு

    சமீபத்திய

    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்

    தமிழக அரசு

    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு தமிழ்நாடு
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழ்நாடு
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் மாநிலங்கள்
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? திமுக

    ஆதார் புதுப்பிப்பு

    50 ரூபாய் கட்டணம் செலுத்தி ஆதாரில் முகவரி மாற்றலாம் - புது வசதி அறிமுகம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025