LOADING...
விஜய் பொறுப்பேற்றவுடன் முதல்வர் அலுவலகத்தில் நடந்த முக்கிய மாற்றங்கள்; முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம்
முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம்

விஜய் பொறுப்பேற்றவுடன் முதல்வர் அலுவலகத்தில் நடந்த முக்கிய மாற்றங்கள்; முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம்

எழுதியவர் Sekar Chinnappan
May 10, 2026
03:51 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் 13வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தனது அலுவலகப் பணிகளைத் திறம்படக் கவனித்துக் கொள்ள இரண்டு முக்கிய அதிகாரிகளை நியமித்துள்ளார். இதற்கு முன்பு மருத்துவத் துறைச் செயலாளராகப் பணியாற்றி அனுபவம் வாய்ந்த பி.செந்தில் குமார் ஐஏஎஸ், இப்போது முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக (தனிச் செயலாளர் - 1) நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளராக இருந்த ஜி.லட்சுமி பிரியா ஐஏஎஸ், முதலமைச்சரின் தனிச் செயலாளர் - 2 ஆக நியமிக்கப்பட்டுள்ளார். உமாநாத் மற்றும் சண்முகம் ஆகிய அதிகாரிகளுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ள இவர்கள் இருவரும், புதிய முதலமைச்சரின் திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியத் தூண்களாகத் திகழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement