NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி
    இந்தியா

    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி

    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி
    எழுதியவர் Nivetha P
    Jan 13, 2023, 09:45 am 1 நிமிட வாசிப்பு
    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி
    மதுரை விமான நிலையத்தில் இனி 24 மணிநேர சேவை

    1962ம் ஆண்டு மதுரை விமான நிலையம் துவங்கப்பட்டு, அதன் பிறகு 2010ம் ஆண்டு புதிய முனையகட்டிடம் திறக்கப்பட்டது. மதுரை விமானநிலையத்தில் 2013ம் ஆண்டு முதல் வெளிநாட்டு விமானசேவை துவங்கப்பட்டு நடந்து வருகிறது. மதுரையில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டுமே நேரடி விமானசேவை உள்ளது. மதுரை விமானநிலையம் இதுவரை சுங்க விமான நிலையமாகவே செயல்படுகிறது, இதுவரை பன்னாட்டு விமான நிலையமாக நிலை உயர்த்தப்படவில்லை. இங்கு 3சர்வதேச விமான சேவைகள் இருந்தாலும், அதிகளவில் பயணிகளை கையாண்டு வருகிறது. மதுரை விமான நிலையத்தோடு ஒப்பிடுகையில் கோவை, ஷீரடி, விஜயவாடா, கண்ணூர், திருப்பதி ஆகிய விமான நிலையங்கள் குறைந்த அளவிலேயே பயணிகளை கையாண்டாலும், அவை சர்வதேச விமான நிலையங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் விமான சேவை - இந்திய விமான நிலைய ஆணையம்

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்கவேண்டும் என்று 10ஆண்டுகளாக பல அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில் கூட, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியாவுக்கு கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், மதுரை விமானநிலையத்தில் பகல் நேரத்தில் மட்டும் விமான சேவைகள் இயங்கி வருகிறது. இதனையடுத்து இரவு நேரங்களிலும் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. இந்த கோரிக்கையினை ஏற்று, 24மணிநேர சேவை தொடங்க விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இந்திய விமானநிலைய ஆணையம் ஏப்ரல்1 முதல் 24 மணிநேரமும் விமானசேவை நடக்கும் என்று அறிவித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    விமான சேவைகள்
    மதுரை

    சமீபத்திய

    கார்த்தி-நலன் குமாரசாமி படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் துவக்கம் தொடங்கியது கார்த்தி
    உங்கள் உடல்நலப் பிரச்சினைகளை பற்றி வெளிப்படுத்தும் உங்கள் தலைமுடி! முடி பராமரிப்பு
    PS5 ப்ளே ஸ்டேஷனின் விலையை அதிரடியாக குறைக்கும் சோனி நிறுவனம்! சோனி
    அதானி குழுமத்தில் சிக்கிய EPFO பணம் - முக்கிய முடிவுகள் என்ன? தொழில்நுட்பம்

    விமான சேவைகள்

    தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு புதிய விமான நிலையம் தமிழ்நாடு
    புதுச்சேரியில் 19 இருக்கைகள் கொண்ட இலகுரக விமான சேவை விரைவில் துவக்கம் புதுச்சேரி
    நடு வானில் எண்ணெய் கசிவு: ஏர் இந்தியா விமானம் திடீர் தரையிறக்கம் டெல்லி
    500 விமானங்களை களமிறக்கும் இண்டிகோ நிறுவனம்! முக்கிய நோக்கம் என்ன? தொழில்நுட்பம்

    மதுரை

    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு கோவை
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு கோவில் திருவிழாக்கள்
    அமெரிக்காவில் தற்கொலை செய்துகொண்ட தமிழ் தம்பதி - தவிக்கும் குழந்தை அமெரிக்கா
    உசிலம்பட்டியில் 50க்கும் மேற்பட்ட நாய்களுக்கு விஷம் வைத்து கொலை மாவட்ட செய்திகள்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023