NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி
    மதுரை விமான நிலையத்தில் இனி 24 மணிநேர சேவை

    மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி

    எழுதியவர் Nivetha P
    Jan 13, 2023
    09:45 am

    செய்தி முன்னோட்டம்

    1962ம் ஆண்டு மதுரை விமான நிலையம் துவங்கப்பட்டு, அதன் பிறகு 2010ம் ஆண்டு புதிய முனையகட்டிடம் திறக்கப்பட்டது.

    மதுரை விமானநிலையத்தில் 2013ம் ஆண்டு முதல் வெளிநாட்டு விமானசேவை துவங்கப்பட்டு நடந்து வருகிறது.

    மதுரையில் இருந்து இலங்கை, துபாய், சிங்கப்பூர் ஆகிய 3 நாடுகளுக்கு மட்டுமே நேரடி விமானசேவை உள்ளது.

    மதுரை விமானநிலையம் இதுவரை சுங்க விமான நிலையமாகவே செயல்படுகிறது,

    இதுவரை பன்னாட்டு விமான நிலையமாக நிலை உயர்த்தப்படவில்லை.

    இங்கு 3சர்வதேச விமான சேவைகள் இருந்தாலும், அதிகளவில் பயணிகளை கையாண்டு வருகிறது.

    மதுரை விமான நிலையத்தோடு ஒப்பிடுகையில் கோவை, ஷீரடி, விஜயவாடா, கண்ணூர், திருப்பதி ஆகிய விமான நிலையங்கள் குறைந்த அளவிலேயே பயணிகளை கையாண்டாலும், அவை சர்வதேச விமான நிலையங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    விமான போக்குவரத்துத்துறை

    ஏப்ரல் 1ம் தேதி முதல் 24 மணி நேரமும் விமான சேவை - இந்திய விமான நிலைய ஆணையம்

    மதுரை விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக அறிவிக்கவேண்டும் என்று 10ஆண்டுகளாக பல அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது.

    சமீபத்தில் கூட, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜோதிராத்திய சிந்தியாவுக்கு கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே போல், மதுரை விமானநிலையத்தில் பகல் நேரத்தில் மட்டும் விமான சேவைகள் இயங்கி வருகிறது.

    இதனையடுத்து இரவு நேரங்களிலும் விமானங்கள் இயக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது.

    இந்த கோரிக்கையினை ஏற்று, 24மணிநேர சேவை தொடங்க விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது.

    அதன்படி, இந்திய விமானநிலைய ஆணையம் ஏப்ரல்1 முதல் 24 மணிநேரமும் விமானசேவை நடக்கும் என்று அறிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விமான சேவைகள்
    மதுரை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    விமான சேவைகள்

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! இலங்கை
    மகாராஷ்டிர சம்ருத்தி மஹாமார்க் விரைவு சாலையின் சிறப்பசங்கள் சம்ருத்தி மஹாமார்க்
    இந்திய ஏர்போர்ட்களில், பாதுகாப்பு சோதனைக்கு வரப் போகிறது புதிய ஸ்கேனர்கள் விமானம்
    பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிரான போராட்டம் 150வது நாளாக நீடிப்பு போராட்டம்

    மதுரை

    கடந்த ஆண்டில் ரூ.11 கோடி மதிப்புள்ள 1400 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 1981 வழக்குகள் பதிவு இந்தியா
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் - மத்திய அரசு உறுதி இந்தியா
    மதுரையில் பரபரப்பு - ஆட்சியர் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 29,000 சேலைகள் மற்றும் 19,000 வேட்டிகள் கருகின பொங்கல் பரிசு
    அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025