NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர் கொண்டுவந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர் கொண்டுவந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்
    கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர் கொண்டுவந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்

    கோயில் கும்பாபிஷேகத்திற்கு சீர் கொண்டுவந்த கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள்

    எழுதியவர் Nivetha P
    Mar 28, 2023
    05:22 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் உள்ள கே.வி.கே. குப்பம் என்னும் மீனவ கிராமத்தில் மீனவ மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்படும் படவேட்டம்மன் ஆலையம் ஒன்று சிறிதாக இருந்துள்ளது.

    இதனை புனரமைக்கும் பணியானது கடந்த 2021ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

    இந்த திருப்பணியானது திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் தலைமையில் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது.

    இக்கோயிலில் ஸ்ரீ படவேட்டம்மன், முருகன், விநாயகர் சன்னதிகள் மிக அருமையாக நவீன முறையில் கட்டப்பட்டுள்ளது.

    திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், மகா கும்பாபிஷேக விழா கடந்த 19ம் தேதி பந்தல் கால் நடும் நிகழ்வு கொண்டு ஆரம்பித்தது.

    சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது

    சிவாச்சாரியார் சதீஷ் தலைமையில் குருக்கள் ஒன்று சேர்ந்து புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம்

    இதனைதொடர்ந்து ஐந்து யாகசாலைகள் அமைக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டு வந்தது.

    தொடர்ந்து பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து புனிதநீரினை கொண்டு வந்து கலசத்தில் வைத்து கோ பூஜை, கலச பூஜை போன்ற பல பூஜைகள் செய்து வந்தனர்.

    இந்நிலையில் இக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் மிக விமர்சையாக நேற்று(மார்ச்.,27) நடைபெற்றது.

    மங்கள வாத்தியங்கள் முழங்க கலசங்கள் புறப்பாடாகி, சிவாச்சாரியார் சதீஷ் தலைமையில் குருக்கள் ஒன்று சேர்ந்து படவேட்டம்மன், முருகர், விநாயகர், ராஜ கோபுரம் மற்றும் பஞ்ச கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் செய்தனர்.

    இவ்விழாவில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் சீர்வரிசையோடு ஊர்வலமாக வந்து படவேட்டம்மனுக்கு மரியாதை செய்தனர்.

    இது பக்தர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    கோவில் திருவிழாக்கள்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    சென்னை

    இதுவரை இல்லாத அளவிற்கு எகிறிய தங்கம் விலை - இன்றைய விலை! தங்கம் வெள்ளி விலை
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! கோவை
    சென்னை ஐ.ஐ.டி.யில் மேலும் ஒருவர் மாணவர் தற்கொலை - அதிர்ச்சி சம்பவம் தமிழ்நாடு
    இன்று முதல், சென்னையில் துவங்கவிருக்கும் ஈரானிய படவிழா ஈரான்

    கோவில் திருவிழாக்கள்

    கேரள கோயில் திருவிழாவில் பங்கேற்ற ரோபோ யானை - சேவை துவக்கம் கேரளா
    கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசி மக தேரோட்டம் கோவில்கள்
    தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு
    மதுரை மீனாட்சியம்மன் கோயில் நடை வரும் ஏப்ரல் 8ம் தேதி அடைப்பு மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025