NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய குழந்தையின் கை அகற்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய குழந்தையின் கை அகற்றம் 
    சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய குழந்தையின் கை அகற்றம்

    சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் ட்ரிப்ஸ் ஏற்றிய குழந்தையின் கை அகற்றம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 02, 2023
    06:01 pm

    செய்தி முன்னோட்டம்

    ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் நீர் வழிந்துள்ளது.

    இதனால், அவர் மேல் சிகிச்சையளிக்க தனது குழந்தையினை சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

    இதனையடுத்து, அந்த ஒன்றரை வயது குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டதாக தெரிகிறது.

    அதன் பின்னர், 2 நாட்களுக்கு முன்னர் குழந்தையின் கை கருப்பாக மாறியுள்ளது.

    ஆனால், செவிலியர்களிடம் கேட்கையில், அது ஒன்றும் பிரச்சனையில்லை என்று கூறி இருக்கின்றனர்.

    ஆனால், குழந்தையின் வலதுக்கை அழுகி முட்டி வரை செயலிழந்ததையடுத்து, கையினை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    இதனைக்கேட்ட பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

    தற்போது அந்த குழந்தை அறுவை சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    அமைச்சர் 

    நிச்சயம் உண்மைத்தன்மை கண்டறியப்படும் என அறிவிப்பு

    இந்த சம்பவத்தினையடுத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் தான் பச்சிளம் குழந்தையின் கை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது என்று புகார்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில், இது குறித்து அறிந்த அமைச்சர் மா.சுப்ரமணியம், நானும் இதுகுறித்த செய்தி அறிந்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரித்தேன்.

    அதற்கு அவர்கள், குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளது.

    ஏற்கனவே உடலில் பல பிரச்சனைகள் உள்ளது, இதயத்தில் ஓட்டை உள்ளது, அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்படவுள்ளது என்று கூறினர்.

    மேலும், ட்ரிப்ஸ் போட்ட விவகாரம் குறித்தும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளோம்.

    மருத்துவர்களோ, செவிலியர்களோ யாரும் பாதிப்பினை ஏற்படுத்த மருத்துவமனைக்கு வருவதில்லை.

    பாதுகாக்கத்தான் வருகிறார்கள். நிச்சயம் உண்மைத்தன்மை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ராமநாதபுரம்

    சமீபத்திய

    இன்று முதல், எஃகு, அலுமினியம் மீதான இறக்குமதி வரிகளை 50% ஆக உயர்த்தும் அமெரிக்கா அமெரிக்கா
    இ சாலா கப் நம்தே! முதல்முறையாக IPL கோப்பையை வென்றது RCB ஐபிஎல் 2025
    லோகேஷ் கனகராஜின் LCUவில் இணையும் நிவின் பாலி லோகேஷ் கனகராஜ்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி: ஆர்சிபி அணிக்கு எதிராக பீல்டிங் தேர்வு செய்த பிபிகேஎஸ்!  ஐபிஎல் 2025

    சென்னை

    சென்னை மெட்ரோ ரயில் பார்க்கிங் கட்டணம் உயர்வு - மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு மெட்ரோ
    மாணவர்கள் சேர்க்கையினை அதிகரிக்க நவீனமயமாக்கப்படும் சென்னை பள்ளிகள்  பள்ளி மாணவர்கள்
    தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி லேப்டாப்
    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  வருமான வரித்துறை

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது மாவட்ட செய்திகள்
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025